Wednesday, March 17, 2010

புதிர்

விட்டது எதை பற்றியது எதை
விளங்கவில்லை இன்று வரை
கேட்டது எதை கேளாதது எதை
கணக்கிட்டு பார்க்கவில்லை
பட்டது எதை படாதது எதை
புலப்படவில்லை புத்தியில்
இட்டது எதை இடாதது எதை
இடது கைக்கு தெரியவில்லை
போட்டது எதை போடாதது எதை
பிரமன் எழுத்து புரியவில்லை
புரியாத புதிராய் வாழ்வென்பது
மொத்தத்தில் மெத்த நன்றானது.

No comments:

Post a Comment

IndiBlogger - The Indian Blogger Community