நில்லாமல் சுழலுது பூமி
நிதமும் புலருது காலை
நிழலாய் மாறுது நேற்று
நிலவும் தேய்ந்து வளருது
நித்திரையில்லாதது இயற்கை
நியதிகள் அதன் அச்சு
நிலை மாறும் வேளை
நிகழும் அழிவும் அழுகையும்
நிகழ்வில் உறையும் நீதி
நினைத்தால் மாறும் மானிடம்
நிதியின் பின்னே உலகம்
நிகழ்த்தும் பல பாதகம்
நின்று கொல்லும் தெய்வம்
நிகழ்காலம் தரும் பல வரம்
நிறைகுடமாகுமோ நம் மனம்
நிந்தனை ஏதும் நெருங்காது
நிலத்தில் யார்க்கும் வணங்காது
நிம்மதியின் குளிர் நிழலிலே
நிலைக்கின்ற மோனமொன்றே
நிகரில்லா பேரின்ப நிலை
நிழல்கள் நீளும் வேளை
நினைவுகள் மங்கும் மாலை
நிழலாய் மாறும் கவலை
நிதானம் காணும் வெள்ளம்
நிரம்பி ததும்பும் உள்ளம்
நிற்காத அலைகளின் ஆழம்
நிச்சலனம் உறங்கும் மஞ்சம்
நிசங்கள் உணர்ந்த நெஞ்சில்
நிர்மூலமாகும் பற்றெல்லாம்
நிரந்தரமானதோர் விடுதலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment