வருடத்தில் ஒரு நாளை
கொண்டாடிக் கொள்வோமோ
மொத்தமாய் மீதி நாளை
தாரை வார்த்திடவோ
தரணியில் ஆடவர்க்கே
உரிமைக்குரல் உயர்த்தவும்
உயர்வை எண்ணி பூரிக்கவும்
கூட்டம் கூட்டி களிக்கவும்
பேட்டி அளித்து முழங்கவும்
சாதனை பட்டியல் வாசிக்கவும்
எட்டிய சிகரம் விளக்கவும்
இன்னும் கனவுகள் விரியவும்
ஒரு நாள் ஒதுக்குதல் அநீதி
வருடம் முழுதும் விழித்திரு
மணம் வீசி முகிழ்த்திரு
மறக்கவிடாதே மற்ற நாளில்
மாதர் தம் மகிமைகளை
மடமையில் மங்கிடாத
மாபெரும் மாண்பினை
மறந்துவிடாதே தினமும் மலர
மங்கையே மாசறு மணியே
மணம் குன்றாத மகிழம்பூவே
மானிட சொர்க்கத்தின் மையமே
Monday, March 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment