Tuesday, March 23, 2010

An utter shame

Highly sickening! Absolutely ridiculous! A crying shame! Let me reproduce exactly the news in today's 'The Times of India, Mumbai':

New Delhi: In an observation that will cheer votaries of of pre-marital sex and living-in, the Supreme Court on Tuesday said a man and woman living together without marriage cannot be construed as an offence. 'When two adult people want to live together what is the offence? Does it amount to an offence? Living together is not an offence. It cannot be an offence,' a three judge bench of Chief Justice K.G.Balakrishnan, Deepak Verma and B.S.Chauhan said.

The court said even Lord Krishna and Radha lived together according to mythology.

The apex court said there was no law which prohibited live-in relationships or pre-marital sex. The observation came while the court reserved its judgement on a petition by actress Khusboo, seeking to quash 22 criminal cases filed against her after she allegedly endorsed pre-marital sex in interviews to magazines in 2006.

The judges grilled the counsel for some of the complainants and repeatedly stressed that the perceived immoral activities cannot be branded as offence. The counsel had argued that her comments adversely affected young minds.

'Please tell us what is the offence and under which section? Living together is a right to life,' the court said, referring to Article21 which granted right to life and liberty as a fundamental right.

It added that the views expressed by Khusboo were personal. 'How does it concern you? We are not bothered. At the most it is a personal view. How is it an offence? Under which provision of the law?' the bench asked the counsel.

The court further asked the complainants to show if any girls had eloped after the said interview. 'How many many homes have been affected?' the bench asked, enquiring if the complainants had daughters. When they said no, it shot back: 'Then how are you adversely affected?'

That is the end of the news under the title:SC: Pre-marital sex, living-in not crime


:twisted: :argh: :curse: :hammer: 'Brilliant', 'superb', 'excellent'...arguments and quotes from mythology, purely unrealistic, out-of-context, deceptive, misleading, irresponsible, arrogant words!!! Roguish and depraved men and women have the cheek to do and act in this manner! :hammer:

The clear realisation is: Khusboo is a rich woman, the judges are not untainted 'poor' men! :huh:

Sunday, March 21, 2010

The Beach

On the beach I sit for hours entranced
Seeing how the world around me danced
A feast of cheerful sights and sounds
The spice of life's variety here abounds

Kids squealing in joyous laughter
The elders only happy to run after
Lovers are transported to paradise
The surroundings lost to their eyes

Friends gathered to forget their care
Breathing in the freshness of salty air
Fun and entertainment for all ages
Even fortune-telling parrots in cages

The kaleidoscopic scenes make me wonder
Making my harrowed mind cease to ponder
Lost in a state of blissful reverie
A magic eraser rubs my memory

I feel not the fine sand in my palm
Dripping through in celestial calm...

Money is a tool, not all...

Times there were when muscle power ruled-
The caveman's main tool to wield.
An Atlas, a Hercules and an Ulysses
Proudly did parade their prowess.

Then came an age of moral power;
In supreme honor did Pandavas tower.
Lord Krishna's scriptures paved us the way
And in personal grandeur Lord Rama did sway.

Now reigns an era of money power-
Seen, felt, heard and sensed every hour;
An urge, a goal, a craze, a quest-
The very pulse and throb of human breast.

Money speaks- everywhere- with emphasis:
A magic key to open all doors, it is.
Admissions to schools and colleges are easy
When approached from the rear with sums hefty.

Petitions and applications of loyal citizens
Glide through the red tape with right lubrication.
You wish and it is done
When the packet to the party has gone.

Money manipulates marriages nowadays
Since grooms stalk with price tags-
Girls sweat in lewd office glare
The parents in penury the rest share.

The spirit and thrill of sports is forgotten
Because match-fixers have made the players rotten.
Horse-trading is the stamp of politics everywhere;
Bulls and bears in stocks do not play fair.

None works for honest fare;
Norms and ethics are nobody's care.
Every service demands you to tip,
The world's in corruption's grip.

Money is the pivot on which life now turns-
In the rat race all values it churns.
"Do or die" is the cut-throat competition-
Material comforts are the first consideration.

Money can make many things;
Money cannot buy many things-
A soft pillow, but not a sweet slumber;
A huge palace, but not a warm home.

Chase money with might and force-
Lose many simple joys in the course.
Desist the mad pursuit of riches,
Beware of money's cruel clutches.

Money is a tool, not all;
A path, not a goal;
Put mercy first and money next;
Live and let live, content is best.

The Particle of Wonder

The Particle of Wonder
The pines of hills, the pearls of oysters,
The peaks of mountains capped with snow,
The piles of vast desert sands,
The pebbles under clear waters,
The plumes of parrots and peacocks,
The plushy coat of feline creatures
Are a source of sensuous pleasure
And food for wondrous thoughts of philosophy.
Behold in the petals of flowers
And wings of butterflies
A painter with a palette of gorgeous colors,
An engineer with ingenious designs.

What is Fashion?

Fashion is a mirror-
It reflects day-to-day trends,
Showing man as a social animal.

Fashion is a feast -
It whets the appetite for attention,
Aided and abetted by flattery.

Fashion is a spice-
It adds variety;
Makes life's fare a delicacy.

Fashion is a molting process-
Old modes give way to new,
Reviving moods and mind-sets.

Fashion is a phenomenon-
It makes apes of men,
Prompting blind imitation.

Fashion is a wave-
It rises and falls;
There's no stopping it.

Fashion is a wind-
It is wayward and fickle,
Has no plan or principle.

Fashion is a wildfire-
It is self-created,
Burns out not put out.

Fashion is a flower-
It's first a blossoming glory,
Very soon a withered memory.

Fashion is a kaleidoscope-
It's ever-changing and enchanting
With its infinite scope.

Wheels of Justice

Seven virtues, there are, to be acquired
For a happy, healthy human life.
Justice, one among them, is being fair and right;
It's also a punitive measure to set right a wrong.

Social and personal peace hang on it,
A hard job, it is, to keep it from tilting.
The tact of kings Solomon and Vikramadithya
Is the wanted but rarely found gift in courts of law.

Petty thefts and waylaying plunders,
Minor assaults and gruesome murders
Meet justice in fines and flogging
Or prison term and hanging.

Yet many a wrongdoer goes scot free;
A rapist very rarely is sued;
Seldom is a wife-beater disapproved;
Child labor laws are never enforced.

Manmade laws abound in loopholes-
Hairsplitting technicalities and callous practices
Make the goddess of justice holding the scales
Bind her eyes blind, perhaps.

Sure, we find it not proper
For the wicked and the mean to prosper
When the honest and the meek do suffer:
Justice seems an eluding enigma as ever.

Times there are when we wonder
If justice exists at all. Justice doth prevail unknown to many.
God, to execute it, has ways uncanny.
Guilt and remorse are slow avengers;
Each culprit doth face a sure reckoning.

The great bard Shakespeare scanned
The whole width and depth of human nature
And dramatically dispensed poetic justice
To a Hamlet, a Macbeth, an Othello and a Lear.

Wise men have left us fables aplenty
That speak of nemesis and retribution.
Know the milkman who added water to his merchandise?
A simple monkey trick deprived him of the undue profit.

If only we watch shrewdly
And with patience of a lifetime
We may feel the wheels of justice
Turning on as sure as life and death.

Can an eclipse rob the moon or the sun
Of its full glory and sheen?

My Love

Nature, my lady love, she is:
The morning mist her fond kiss on my cheek,
The gentle breeze her soft whisper in my ear,
In flowery attire she feasts my eyes.
The flitting butterflies her flirting charms,
Her eager hands, the sea waves, appear.
Her brooks chatter with fun and laughter,
Her balmy woods caress my soul,
The stars, her eyes, wink with mischief-
An enthralled lover, I lie in bliss in her lap.

Forever

Happy was I to walk in the early morn
Watching a brand new day being born.
The blades of grass crowned with glittering dew
Wore the diamond for but minutes few.

Ambling along the gorgeous lotus pond
Sparkling drops on the leaves made me fond
Of marveling at Nature's sheer wonder-
Gems rolling down when a frog moved under.

Joy and sunshine abound where children gather
Blowing glorious bubbles from soapy lather.
I stopped enthralled in childlike fantasy
But catching the floating magic was not easy.

It's bliss to be with my beloved,
Till the parting moment in me moved
A sweet ache to see a brilliant tear
Collect in her eye, hard anymore to bear.

Yes, I know what I ought to do-
Catch and keep the sparkle too-
Make her my own with a diamond ring
Heaven's choicest blessings on us to bring.

Cyberspace

Cyberspace
Space is the place where
The heavenly bodies revolve;
Cyberspace is the internet world where
The human beings evolve
Global communication techniques.
After the tom tom beat and pigeon missive,
The horseback courier, airmail and wireless
Flash now instant messages
On the monitors of home computers.

Oceans of knowledge, tons of printed treasure,
Packed in pin head spaces open to view
Without our straining a sinew!
Oh! The silicon wonder of bits and bytes!
Surf across the net and get
Latest findings and hottest news,
Tho' authenticity of a lot is not warranted!

It's an amazing world of fun:
Brainy teasers, hilarious cartoons,
Gambling casinos, chatting cafes,
Bizarre websites, perverse pictures
Are online pastimes round the clock.
Masked identities, dropped inhibitions,
Strange lingo, stranger etiquette,
Naughty chattings, naughtier greetings
Are marks of this virtual world.

Also, hackers with negative genius
Are up to endless mischief;
Virus, the thief prowls with stealth
To corrupt wares hard and soft;
The highway teems with cheats and freaks
Pandering to vices, abetting heinous crimes,
Leading unsuspecting prey to devastation.


It's thrilling to be another Columbus
Sailing through unending seas
Of sites, sites and more sites.
Pride surges within at power
To command knowledge and information,
To demand service and recreation-
Too heady a menu hosted
To escape intoxication full and thorough.

And addiction seems inevitable-
Estranged from the real world,
Alienated from living creatures,
Living in self-imposed confinement,
The mouse-potatoes put on weight,
Are prone to illnesses many, the statistics say.

Communal sharing via electronic media
In lieu of physical contact-
Does it bode well for man
Basically a social animal?
Will the computer surpass and overpower
The human brain that begot it?
Posers worth contemplating-
Problems pressing for prompt solutions.

Animal Train

Our Earth is Lord’s wonderful domain
Bound by one long, intricate food chain.
Man is the leading engine with a clever brain,
Animals trail behind as bogeys of Nature’s train.

Engine and bogeys are in no way similar
Man motored by intelligence is singular;
Pattern of living in animals is regular,
For primal instinct are they popular.

From man do animals entirely differ
To walk on four legs they prefer,
Beautiful feast to the eyes they offer
Gifted with convenient aids to live safer.

Tails, mane and whiskers are their specialty
Each equipped with for a specific utility.
Gorgeous coats with dots and stripes of variety
Flaunt the Creator’s imagination and its fertility.

Unwritten law prevails on their roaming territory,
Herds obey leader’s orders that are peremptory.
“Live and let live” is their general policy;
Survival is their motivating force, not any vagary.

Unlike man they mate only in the season;
To kill, purpose not pleasure is their reason.
Tooth and nail, horn and hoof their weapon-
Thankfully no catastrophic, nuclear poison.

Untainted with wanton evil,
Too naïve for disastrous skill,
Unaware of the impending peril,
The unthinking bogeys may derail.

Engine with necessary direction,
Heeding some proper correction,
Hastening towards animal protection
Heads for journey’s happy completion.

Ego

Ego is for self another name,
Thirsting forever for fame,
Brooks it not on it a blame,
In desire it is ever aflame,
Thinks not others as same,
To err has it excuses lame,
To sin shows it no shame,
Cares not its pride to tame-
As an ocean’s drop it came,
A little dot in Nature’s frame,
A winner in evolution’s game,
Its own arena the world became.

Musing

In moments of triumph
Silence is enough
Joy to express
Put out stress
Find rapport
Kind support
Pausing to wonder
Calm lying under
Tumultuous waves
Fashion’s slaves
Bustling fanfare
Found everywhere
Souls profound
Make no sound
Aspiring hearts
Lofty thoughts
Glowing dreams
Flowing streams
Hastening to sea
Fruition to see

Nature

Nature is Knowledge
Physics and Chemistry are
Laws of motion and reaction,
Botany and Zoology are
The character of flora and fauna,
Maths and Astronomy are
Number games and distance calculations,
Multitude of medical branches are
Membering the body bossed by the brain.
Nature is an ocean
Of boundless knowledge.
Bit by bit, man does learn it-
Meek and humble
Like a child picking shells on the beach,
Awed by Nature's intricate complexity
Shrouded in seeming simplicity.

In Modern Terms

Grow and multiply!
A Divine blessing indeed.
Nature is procreation-
The axis on which the earth rotates.
Nature, in modern terms,
Is a factory
Each part in its place
Each action on time-
Masterminded by our Creator.
The Elements, the Seasons,
The Revolutions, the Cycles-
Are in truth the perfect parts of
A machinery of astounding complication
Functioning with stunning precision.
Perennial fuelling, constant recycling,
Phased regeneration and much more
Make our earth the Eden it is.

A Woman's Point of View

Little use there is in contesting the fact that man is superior to woman in physical power: more muscles, taller stature, broader shoulders, stouter and sinewy. His prowess is proven in the brave progress he has made down the ages, hunting for food, cultivating for better living, conquering territories for more power. He has made good advantage of the new avenues of knowledge opening before him. He explored untiringly into the regions of science and technology. In short pages of history remember him as the ruler, achiever and savior with great physical and intellectual strength. He is seen to be born to govern, to protect and dominate. A chauvinism has grown on him making him look arrogantly despotic.

Woman seen as a lesser version with tender makeup of physique and delicate features has been allotted a shaded place in the background, a safe shelter in home looking after the appetites and needs of the mighty man, delivering his progeny and bringing them up. Keeping the hearth warm and cozy has been her primary if not the only duty.

On the surface it does not sound fair to the fair sex. Denying them the chance to excel, to contend with her counterpart in all the planes of his activity has dawned lately as a shocking revelation to the newly emancipated woman. Viewing it as an injustice and a challenge she is up in arms parading all her acumen and capabilities. She has come out to the world arena to prove her mettle and merit.

Such a development of her going overboard to prove her potentiality has landed us in a new environment of unheard of, unhealthy lifestyles and moral concepts. Roles are changed. Priorities are revised. Families split up. Divorces increase. Old age homes, crèches and orphanages have come to stay as inevitable facilities. The very essence and color of womanhood has started to change.

There is no harm in education, in being intelligent, in being enterprising, in enlightened emancipation. But much harm is done to our once peaceful, happy familial system because of many of the modern myths and misconceptions about gender discrimination and slavery of women.

The worst myth is that man is superior and woman is inferior. Physical power does not decide superiority. Man and woman being complementary physically, emotionally and morally there is no scope for comparison. One does not exist without the other. They are interdependent. Together their life is whole and meaningful. Each have their own duties, roles and responsibilities.

Motherhood is a unique role allotted to woman. A special gift of Nature. To be able conceive a life, carry it in the womb, to deliver it at the ordained time, to suckle it with her own milk, to watch the toddler grow to an adult with growing pride is a dedication and devotion only a mother is capable of. Man has neither a womb nor the experience of gestation, the supreme experience of a bit of godliness. At birth the umbilical cord is severed, it is true. But does not the maternal instinct follow to the tomb? Is there anything comparable to it in this world?

The superiority of woman, then, clearly lies in her motherly nature. Let us strive to preserve it, save it from all cultural invasions and lifestyle changes. May women vow to revere motherhood on this memorable day which was born to celebrate winning decent, respectable working conditions for women! Dignity of mankind is entrusted with women and women only.

எங்ஙனம்?

உன்னை நீ அறிவதெங்ஙனம்?
அங்க அடையாளங்களாலா?
அன்னை தந்தை வைத்த பெயராலா?
உறவுகள் அழைக்கும் பதவிப்பெயராலா,
துணைவி, தாய், சகோதரி, பாட்டியென்றா?
கற்ற கல்வியாலா பெற்ற பட்டங்களாலா?
பழியும் பாராட்டும் காட்டும் கண்ணாடியிலா?
திரியின் எண்ணையாய் தூண்டும் நட்பினாலா?
ஒட்டியும் எதிர்த்தும் பறக்கும் வாதங்களாலா?
சிந்தனை உரைகல்லான இம்மன்றாத்தாலா?

நற்செயல்கள்

நிலையாய் நிற்கும் நன்னெறிகள்
நிலையாது சுற்றும் உலகினை
நிலைக்கச் செய்யும் அச்சன்றோ
நற்செயல்கள் நல்ல உரமன்றோ
மனதை பதப்படுத்தும் சுகமல்லவோ
நாளை வரும் நல்ல பலன்கள்
நம்பி நடத்துவோம் நற்பணி
தீங்கனியாம் மாங்கனியை
தின்றபின் கொட்டையை
கொல்லையிலே குழி தோண்டி
கிழவன் சிரமப்பட்டு விதைக்க
பார்த்திருந்தவன் ஏளனமாய்
கனி பறிக்க இருப்பாயாயென்று
கேட்டிட கிழவன் சொன்னான்
பொறுமையாக தாத்தன் தந்தான்
நான் உண்டேன் நான் தந்தேன்
என் பேரன் உண்பான் என்றே
பாவங்களும் புண்ணியங்களும்
பரம்பரை சொத்தல்லவோ
தந்துவிட்டு போவோம் தக்கதை

ஏன்

லேசானது மனது
குளிந்த காலையில்
குயிலின் கூவலிலே
இதமான பகலிலே
மீண்டும் தேன் காதிலே
சிலிர்த்துப் போனேனே
ஏழாவது மாடி சாரத்தில்
ஏறி வேலை செய்பவன்
பிசிரின்றி பாடினான்
திடீரென தானாகவே
லயித்துப்பாடிய குரலில்
குழைவும் லயமும்
கூடவே பாவமும்
ஏன் பாடினான்
அலுப்பு மறக்கவா
அலுக்காத மறக்காத
உறவின் நினைவிலா
இசையின் ரசிகனாகவா
சில வரிகள் மட்டும்
பீரிட்டு வந்தனவோ
பின் நின்று போனதோ
ஏன் பாடினான்
பேருக்கும் புகழுக்கும்
பொருளுக்கும் இல்லை
நிச்சயமாய் இல்லை
மேடை முன்னமர்ந்து
ஆரவாரமாய் ரசிக்க
ஓர் கூட்டமுமில்லை
தானே ரசிகன்
தானே கலைஞன்
கூவும் குயில்
ஆடும் மயில்
சரஞ்சரமாய் மழை
நனைந்த மரங்கள்
சிரிக்கும் பூக்கள்
இனிக்கும் கனிகள்
எல்லாம் ஒரு ரகம்
அவனும் அந்த இனம்

கட்டுப்பாடு

கொள் என்றால் வாயைத் திறக்குமாம் குதிரை
கடிவாளம் என்றால் நொடியில் மூடிக்கொள்ளும்
ஐந்தறிவு குதிரைக்கு மட்டுமா பிடிக்கவில்லை
மனிதருக்கும் கசக்கிறது கட்டுப்பாடென்பது
குதிரையை அடக்கக் கிடைப்பான் தேசிங்கு
மனிதரை நெறிப்படுத்த நன்மார்க்கமேதிங்கு

வினை

உண்மை என்றும் உள்ளே ஒளிந்திருக்கும்
உரித்துத் தின்ன இனிக்கும் பலாச்சுளையாய்

புள்ளி போல் செய்த தவறு வருடங்கள்
தள்ளி பூதாகரமாய் வளர்ந்துவிடுமே
கள்ளிச்செடி ஒன்றினைப் போலவே
முள்ளாய் கிழித்து ரணமாய் ஆக்குமே
பள்ளிப்பருவ ராமனும் விளையாட்டாய்
எள்ளி நகைத்தான் மந்தரை கூனலை
அள்ளிக் கொண்டான் அத்தனை இடரை
சுள்ளியில் பற்றியெரியும் கானகத்து
கொள்ளியாய் நிகழ்ந்தது பாரத யுத்தம்
கிள்ளிவிட்டது பாஞ்சாலி சிரிப்பொலி
புள்ளினம் கூவும் காலை செய்த வினை
வெள்ளி முளைக்கும் வேளை விடியும்

நாடகம்

காட்சிகள் ஒத்திகை இல்லா காட்சிகள்
கண் முன் வாழ்வெனும் நாடக காட்சிகள்
வேடம் உணர்ந்து நடித்தால் திலகமே
வேடமே புரியாமல் நடமாடினால் பாவமே
வசனத்தை குழப்பினால் அது பரிதாபமே
பொருந்தாமல் நின்றால் இல்லை பெருமை
ஒப்பனை கலைந்தால் நகைப்பாகிவிடுமே
ரசித்து நடித்தால் வாங்கலாம் கைதட்டலே

உண்மை

அறியும் உண்மைகள் அனைத்தையும்
அரிச்சந்திரராய் உளறினால் வம்பு
அறியாத உண்மைகள் எதையும்
மேதாவியாய் விளம்புதல் பரிதாபம்
அறிந்த உண்மைகளை சமயத்தில்
உரைக்காமல் போனால் வினை
அறியாத உண்மைகளை கற்க
ஆர்வம் கொள்ளுதல் விவேகம்
உண்மையின் உண்மைகளை
உண்மையில் இங்கேயே பாரீர்

தர்மம்

காதா கண்ணா இரண்டிரண்டு
கேட்டிடு பார்த்திடு இருமடங்கு
காலா கையா இரண்டிரண்டு
கொடுத்திடு உழைத்திடு குறைவின்றி
வாயா அது ஒன்றே ஒன்று
அளவோடு உண்ணு பேசு
மூக்கு அதுவும் ஒன்று
நுழைக்காதே தேவைவயின்றி
மனம் ஒன்றாக இருக்கட்டும்
பல கருத்தையும் வரவேற்று
அமைதியும் உறுதியம் கொண்டு
தர்மம் சூதெனும் கிரகணத்தின்
வாய் சென்று வெளியேறும்
மங்காத ஒளியோடு தப்பாது

புரட்சி

காலமும் ஓடுது புரவி கட்டிய ரதமாய்
சகடங்கள் உருளுது கற்கள் பொடிபட
சங்கடங்கள் புரளுது பூகம்பங்களாய்
சந்ததிகள் மாறுது புரட்சிகரமாய்

கொண்டையை சிலுப்பி கர்வமாய்
கோழிகளை மேய்க்கும் சேவலே
என் கொக்கரிப்பை கொஞ்சம்
பாரடா என்றது பெட்டைக் கோழி

பொல்லாத தோகையை விரித்து
ஆணவமாய் ஆடும் ஆண்மயிலே
அகங்காரம் எனக்குமுண்டு என்
அகவலை கேளேனென்றது பேடை

பிடரியை சிலிர்த்து வீரமாய் கர்சிப்பாய்
வேட்டையாடி நான் கொடுக்க உண்பாய்
வேடிக்கைப் பார்த்து நிற்பாய் நான் பேணிட
நானும் சுகமாய் திரிவேனென்றது சிங்கராணி

திமிலோடு திமிர் வளர்த்த பொலிகாளையே
கொம்பையாட்டி குளம்பால் மண் உதைப்பாய்
கட்டிய பசு நான் இன்று கட்டவிழ்த்தேன்
என் எக்காளம் எப்படியென்று கேட்டுக்கொள்

தொல்லையில்லா தூரத்தில் நிலவுப்பாட்டி
தொலைநோக்காய் கீழே பார்க்கிறாள்
தாடையிலே கை வைத்து வியக்கிறாள்
கோராமையென்னயிது பூலோகத்திலே

அன்பு

அன்புக்காக ஒரு மாளிகை கட்டுவோம்
நம்பிக்கையெனும் அடிதளத்தின் மேல்
அக்கரையெனும் செங்கல் அடுக்கி
அனுசரித்தலெனும் சாந்து பூசி
நாகரிகமெனும் வர்ணம் தீட்டி
நற்பண்புகளால் தோரணம் கட்டி
ஆர்வமெனும் ஊஞ்சல் ஆடிட
அறிவோடு நகைச்சுவை கூடிட
உரிமையோடு நட்பு நுழைந்திட
உவகையோடு குடிபுகுவோமே

புன்னகை

படுத்துகிறது பெண்ணின் புன்னகை
பலபொருள் கொண்ட அப்பொன்னகை
படமாய் நிற்கும் மோனா லீஸாவாய்
பாடமாய் புன்னகையை புகட்டும்
சித்திரப்பாவையர் உள்கிடக்கை
என்னவென்று என்றைக்கும் மர்மமே
அபாயமான அமைதி ஆழ்கடலில்
முத்தும் பவளமும் சுறாவும் திமிங்கலமும்
சிறு மீனும் ஆமையும் எண்ணிலடங்கா
உயிர்களங்கே உயிர்த்துக்கிடக்க
மேற்பரப்பில் சிற்றலைகள் சலசலக்கும்
எரிமலையை மூடிவைத்த ஒரு புன்னகை
எச்சரிக்கை விடுகின்ற மறு புன்னகை
ஏளனமாய் வன்மமாய் ஆவலாய் காதலாய்
கபடமாய் கள்ளமாய் வெள்ளையாய்
பெண்ணின் புன்னகையை சரியாய்
படிக்கத் தெரிந்த பாக்கியவான் யாரோ
காமிராவின் முன் வெளிச்சமாக சிரிக்கும்
வெறும் சிரிப்பில் வசீகரமென்ன கண்டீர்
சவாலாய் ஈர்க்கும் பெண்மை இருக்க
சந்திக்கு வந்த சரக்கின் மேல் ஈக்கள்
தூண்டிலில் வலிய மாட்டும் மீன்கள்
விரித்த வலையில் விரும்பி வீழும் மான்கள்
விபரீத துணிச்சலில் இன்று பெண்கள்
வீம்பில் தொலையுது தாய்மை தகைமை

Saturday, March 20, 2010

நான்

அல்ல அல்ல நானல்ல
தோற்பது என்றும் நானல்ல
சிறுமை என்பது எனக்கல்ல
சிறுமதி படைத்தவனே
சின்னவளை சீண்டுபவனே
நான் என்பது உடல் உனக்கு
நான் என்பது உயிர் எனக்கு
என் உயிரை தொட ஏலாதடா
உன் எல்லை சிறியதடா
புழுவல்ல நான் துடிப்பதற்கு
புல்லல்ல நான் நசுங்கிட
புழுதியாய் என்னை மிதிக்கும்
அற்பமாய் என்னை மதிக்கும்
ஆணவ ஆண் மிருகமே
ஒட்டாத உயிரை அறியாது
உரிமை கொண்டாடுகிறாய்
எக்காளமிடுகிறாய் பதரே
தள்ளி நிற்கும் தண்டவாளமடா
தாமரை இலை தண்ணீரடா
தாலிக்காக பொறுத்தேனா
வேலிக்காக இருப்பேனா
பெண் கர்வம் காத்தேனா
சோதிக்காதே தாங்கமாட்டாய்
விஸ்வரூபம் நான் எடுத்தால்

சொர்க்கம்

சொர்க்கம் எந்தத் திசையில் இருக்கிறது
உலக வரைபடத்தில் இருக்கிறதா
கண்டவர் விண்டதுண்டா திரும்பா தேசமா
நன்னெறி நடக்க நல்லவர் முன்னாளில்
சொன்ன ஆசை வார்த்தையா ஆறுதலா
கற்பனை உலகெனில் கவிஞர் அறிவாரே
படைப்பவர் யாவரும் அனுபவிப்பாரே
குழலும் யாழும் அதை மிஞ்சிய மழலை
சூழ்ந்த பயம் வேதனை நீங்கிய விடுதலை
ஐம்புலனில் தனியாய் மொத்தமாய் சுகம்
அதிலும் எத்தனையெத்தனை விதம்
ஆளுக்கு ஆள் மாறும் கிடைக்குமிடம்
அகராதியில் பொருள் உணர்த்தாத இடம்
தேடத் தேவையில்லாத கைப்பொருள்

தகவல் தொடர்பு

தொலைந்து போனானோ
தோளில் மாட்டிய பையிலே
காத தூரம் கடந்து வந்த
கடிதங்கள் சுமந்து வந்து
நடப்பெல்லாம் நண்பனாய்
நல்லபடி சொன்னவன்
மாற்றங்கள் அறிந்திடுவான்
கண்ணாடி இழை தந்த
கண்ணான புரட்சியிலே
கண்ணாலே பாராதோரும்
கணிணி வழி உறவாடுவர்
சோழனும் பிசிராந்தையாரும்
புணர்ச்சிப் பழகா நட்பிலே
முகமறியா பிணைப்பிலே
கட்டுண்டு மகிழ்ந்ததை
பாராமலே வடக்கிருந்து
பரலோகம் சென்றதை
போல ஒரு பந்தமும்
அரங்கேறும் காலமிது

சதியும் பதியும்

கடைந்திட கிளம்பினர் பாற்கடலை
அமரராகும் ஆசையில் அமிர்தம் தேடி
தேவர்களும் அசுரர்களும் இரு அணியாய்
வடவரை மலை தோதான மத்தானது
வாசுகி பாம்பே கயிறாய் இழுபட்டது
வாதனை தாங்காத வாசுகியும் தான்
காக்கிவிட்டாள் கொடும் விடத்தை
பாற்கடல் பாழாய் போய்விடலாகாதே
பரமசிவன் பாய்ந்து நஞ்சை அள்ளி
வாயில் போட்டு விழுங்கினனே
பதறிய பத்தினி பார்வதி பற்றினாள்
பதியின் குரல்வளையை இருக்கமாய்
ஆலகால விடமது அங்கேயே தங்க
நீலகண்டனானவன் நன்றியாகவே
இடம் கொடுத்தான் தன் உடலில்
இடது பாகத்தை இல்லாளுக்கு
சதியும் பதியும் பாதி பாதி
சம்சாரத்தின் நல்ல நீதி
தீமை தடுப்பவள் தர்மபத்தினி
உரிமை தருபவன் உடையவன்

தனியாளா

வோட்டுத்தான் போடுறாங்க அழகான பொண்ணுக்கு
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு தெளிவாத்தானே
விவரமான பொண்ணுங்க பொளந்துதான் கட்டுறாங்க
வேணும் பெண்ணுரிமைன்னு சத்தமா முழங்குறாங்க
அடிச்சதுக்கொன்னு பிடிச்சதுக்கொன்னு சேலை-
அது அந்தக்காலம் என்னால வாங்க முடியாததான்னு
முகவாய்கட்டையை இடிக்கிறா தோளிலே இன்னிக்கு
அடிக்கிற கை அணைக்க காத்திருந்த பத்தாம்பசலி
அனுப்பி வைக்கிறா விவாகரத்து பத்திரத்த உடனடியா
அடங்கிக் கிடக்க சொல்லுறதா அவ நினைக்கிறா
அப்பாவி ஆம்பள அடி மனசு ஆசைய அறியாத பாவி மக
சிலுத்துகிட்டு நிக்குறா சண்டைகோழியா மாறிவிட்டா
முந்தானையில கண்ணத்துடைக்க ஏங்கற குழந்தைய
காலால எட்டி உதைக்கிறா எட்டி நடை போட்டு
எங்கியோ வெகு தூரம் போறா கூட யாரும் வேணாமா
என்னத்த சொல்லுறது தனியாளா நிக்கவா இப்பொறப்பு

புதுமை

சொல்லத்தான் வேண்டும் ஆராய்ச்சி இருகூர் கத்தியென்று
ஆர்வத்தில் பேரறிவில் கண்டுபிடிப்பு தரும் போதையில்
என்னென்னவோ கண்டு பிடித்தார் அவரே பின் நொந்தார்
வெடியை கொடுத்து வினையை உருவாக்கியவர் பெயரில்
பரிசு ஒரு பரிகாரந்தானோ மனதசாட்சியின் உறுத்தலோ
அணுவை பிளந்தவரறிவாரோ பேரழிவு ஆயுதங்கள் வருமென
பிணி தீர்க்கத்தான் என்று இன்னும் தொடருது பல ஆராய்ச்சி
பலாபலன்கள் பாதகமாய் இருக்க நிறையவே சாத்தியக்கூறு
ஏன் எதற்கு எப்படி என்று கேட்கச் சொன்னவனுக்கு விஷம்
பகுத்தறிவை தூண்டியதால் மடமை இருள் அகல விடிந்தது
விவகாரமான சமூக பழக்கங்கள் போட்ட கொட்டம் முடிந்தது
மாட்டுத்தொழுவினில் கட்டும் பிராணியல்ல பெண்ணென்றான்
மேய அனுப்பிவிட்டானா புரிந்துகொள்ளாமல் போனாரே
ஆணுக்குப் பெண் இங்கு இளைப்பில்லை காண்
நடையிலே உடையிலே நாகரிக போக்கிலே
சரி நிகர் சமானமாய் சேர்ந்து பாடம் படிக்கிறாள்
ஒன்றாய் அமர்ந்து அலுவலகத்தில் பணி புரிகிறாள்
ஊரடங்கிய பின்னும் உழைக்க அனுமதி உண்டின்று
புகை ஊத பழகிவிட்டாள் மது அருந்த தயக்கமில்லை
தோளில் கைபோட்டு தோழமை கொண்டாடுகிறாள்
இடுப்பை அணைத்தால் இம்சையாய் இல்லை
இழுத்த இழுப்பிற்கு மறுக்காமல் இசைகிறாள்
கண் போன போக்கில் மனம் போவதும் தடம் பிறழ்வதும்
ஆணின் தனி உரிமையென்று யார் சட்டம் போட்டது
வானமே இவள் எல்லை போடும் தடைகள் பொடிபடுமே
குடும்பத்தளை அறுத்தவள் தனிக்காட்டு ராணியிவள்
ஒப்பற்ற ஒளியாய் உதித்தவள் நால்வகை சேனையொடு
கோலோச்சப் பிறந்தவள் கருப்பையை பணயம் வைத்தாள்
பொய்மானை விரட்டும் பந்தயத்தில் பித்தாய் ஓடுகிறாள்
பூவுலகை காரிருள் கருநாகம் கவ்விட காத்திருக்குதே
கிரகணங்கள் விலகாது போகாது என்பதே ஆறுதல்

வண்ணக்கோலங்கள் பொம்மை

தானே முளைக்கும் வானவில்கள்
வண்ண வண்ண கோலங்கள்
யாரும் வரையா ஓவியங்கள்
வடிக்க முடியா காவியங்கள்
சிந்தை மயங்கிய விருந்துகள்
சிதறி விழும் ரத்தினங்கள்
எண்ண இயலா வடிவங்கள்
நொடிக்கு நொடி புதுமைகள்
நெஞ்சை அள்ளும் நேர்த்திகள்
திரும்ப வராத சித்திரங்கள்
வியந்து மாளா விசித்திரங்கள்
சொக்க வைக்கும் கணங்கள்
குழந்தை போல குதூகலங்கள்
குதிபோடும் இன்ப மனங்கள்
மண்ணைத் தின்ன மாயவன்
வாய்க்குள் ஈரேழுலோகங்கள்
மூன்று பட்டை கண்ணாடிகள்
உடைந்த பாசிமணி துண்டுகள்
அடைத்த கையடக்க பொம்மை
ஒத்தைக் கண் வழியே விரியுது
கருத்தைக் கவரும் மாயாலோகம்
கீழே வைக்க மனமில்லை
நேரம் போவது தெரியவில்லை
இன்பம் இதுபோல் வேறில்லை
எட்டுமோ அதிசயத்தின் எல்லை
போற்றிடு கண்ணாடிச் சில்லை
உடைந்த சிறு வண்ணக்கல்லை
ஆக்கியவன் எந்த வித்தகன்
பாக்கியவான் எனை ஆக்கினன்
சொக்கிப்போக வைத்தனன்
சோர்விலா விழி விருந்திலே

முரண்கள்

தான் என்ற ஒன்று
தரணியில் இன்று
காற்றாய் சென்று
நிறையும் என்று
எதிர்பார்த்ததன்று

நீ ஆணி
நான் சுத்தியல்
என் அடிதான்
உன் தலைக்கு
மோட்சம்

நீ செருப்பு
நான் கால்
எனக்காக தேய்
பிறந்த பயனை
அடைவாய்

இப்படித்தான் நடந்தது
மூளைச்சலவை
சத்தமில்லை
சங்கடமில்லை
வண்டி ஓடியது

ஆணின் வேதம்
உடைக்கும் பூதம்
அடுக்குது வாதம்
போடுது கோஷம்
கலையுது வேஷம்

மருந்துக்கு உண்டு
விளைவென்று ஒன்று
பக்கவிளைவு ஒன்று
புரட்சிக்கும் உண்டு
இவ்விளைவிரண்டு

தாய்மைச் சுடர்கள்
காவியத்தொடர்கள்
தரமான வைரங்கள்
தாரமான நெருப்புகள்
ஈரமான நெஞ்சங்கள்

சுதந்திர பறவைகள்
அபூர்வ சிந்தாமணிகள்
அல்லி ராணிகள்
மதியா வேதாளங்கள்
புதிய பூபாளங்கள்

கள்ளமில்லா மொட்டுக்கள்
களம் வெல்லும் சிட்டுக்கள்
கலையின் மாடங்கள்
இலக்கிய ஓடங்கள்
இனிக்கும் பாடங்கள்

திறந்த தொந்திகள்
அரிதார மந்திகள்
அறுசுவை பந்திகள்
கலியுக குந்திகள்
பண்பின் அந்திகள்

திறந்த மேடைகள்
திரண்ட தேனடைகள்
ராணி தேனீக்கள்
கூர் கொடுக்குகள்
அடிமை ஆணீக்கள்

விதைத்தது திணை
விளைந்தது வினை
தொடுக்குது கணை
சொல்லுது நினை
உண்மைதனை

தோட்டக்காரா
கைகட்டி நிற்பாயா
களை எடுப்பாயா
பயிர் வளர்ப்பாயா
பலன் பெறுவாயா

அழகோவியம்

மனதிலே அவளுக்கென்ன மகிழ்ச்சியோ
பொழுதுக்கொரு பூச்சு முகத்துக்கு
ஒப்பனைக்கு அழகு நிலையம் போகாமல்
தங்க முலாம், வெள்ளி முலாம், செம்பு முலாம்,
கருநீலம், வெளிர்நீலம் என வைரத் துகளோடு
மின்னுகிறாள் கையை வீசி வீசி வருகிறாள்
புதுமணப்பெண் போல் அழகோவியமிவள்
கரையோரம் காத்துக்கிடப்பது யாருக்காக

வசமாக்கினாள்

வசமாக்கினாள் என்னை முழுதுமாய் தன்னிடம்
வசியம் என்னை செய்துவிட்டாள் என்றைக்கோ
இருப்புக்கொள்ளாமல் நானிங்கு தவிக்கிறேன்
இனிய இம்சைப் படுகிறேன் படுக்கையறையில்
இரவும் வந்து வெகு நேரமானது அப்பொழுதே
இல்லாள் என்னருகே வரத்தான் ஏன் தாமதமே
பாசாங்கவள் செய்கிறாள் பறந்து திரிகிறாள்
எதையோ எடுக்க வைக்க உள்ளே வருகிறாள்
அடுத்த நொடியே விரைந்து வெளியே ஓடுகிறாள்
கள்ளிக்கு கைவைந்தது இந்த சாகச காரியம்
முள்ளின் மேல் என்னை கிடத்திடும் நாடகம்
சாக்கு போக்கு தானே நன்கு சொல்கிறாள்
கைக்கு எட்டாமல் இப்படியேன் கொல்கிறாள்
மல்லிகை மணத்தை விட்டுச் செல்கிறாள்
மஞ்சத்தில் எனை பாராமல் போகிறாள்
தேவதையவள் அங்குமிங்கும் நடக்கிறாள்
தேய்ந்து நெருங்கி கொலுசொலி கேட்கிறது
காத்துக் காத்து தவிக்கிறேன் தாபத்திலே
வெட்டியென்ன முறிக்கிறாள் இந்நேரத்திலே
அப்பாடா வந்தேவிட்டாள் என்னருகிலே
அணைக்கிறேன் தொலைகாட்சியையும்
காத்திருந்து கனிந்த கனிச்சுவையறியாத
காமுகன் "கன்னி"யை தின்னும் காட்சியை
முட்டாள் பெட்டிக்குள் மூடி முழுகினேனே

பருவமறிதல்

மாங்கன்று ஒன்று அதற்குள் பூத்ததுவே
கூசாமல் பறித்தெறிந்தான் தோட்டக்காரன்
அவசரமாய் பூத்த பூக்களையே அறிவுடனே-
வயதுக்கு வராமல் பூத்துவிடுதல் நல்லதில்லை
அவனறிவான் களையெடுக்கும் கலையோடு
வெயில் தேடும் செடியெது நீர் கேட்கும் மரமெது
நிழல் வேண்டும் கொடியெது காலத்தே இலையை
கிளையை கொய்து கவாத்து செய்தவன் போற்றும்
பாங்கிலொரு பாடமுண்டு வாழ்வெனும் சோலைக்கும்
பருவம் முந்தி பூத்து வந்த பிஞ்சு வெம்பும் கனியாகாது
கனியின்றி விதையின்றி விருத்தியின்றி பொருளேது
காய்ந்துதான் போகலாமோ கற்பகச் சோலையிது

ராணி

இது ஒன்றும் புதிய கண்டுபிடிப்பல்ல-
ஆணின் வெற்றிக்குப் பின் பெண்ணென்பது:
ஓரடிக்கு மேல் நகர ஏலாத அரசனுக்கு
ஆனை சேனை குதிரை சிப்பாய் மந்திரியுண்டு
அத்தனை பேர் தனி சக்தியும் தான் கொண்டவளாய்
எட்டு திசையிலும் எத்தனை எட்டு வேண்டுமானாலும்
எடுத்து வைத்து அரசன் வீழாமல் காத்திடுவாள்
அந்த சதுரங்க ராணி மனையாட்சியும் அவளுக்கே

இன்பம்

இருக்கும் இடம் அறியாரே அலைகின்றார்
இன்பம் இருக்குமிடம் அவரவர் கொல்லையிலே
குலைகுலையாய் காய்த்திருக்கு கனிந்திருக்கு
குதூகலம் அங்கே குளிர்ச்சியாய் நிறைந்திருக்கு
வேப்பம்பூமணமாய் மகிழம்பூமணமாய் காற்றிலே
வேறு யார் வேண்டும் உயிர் கலந்த உறவைத்தவிர
சொந்தமும் பந்தமும் சுமக்க இரு தோளிருக்க
சொர்க்கம் போலொரு சுகம் அங்கு நிரந்தரம்

சுவடு

காலக்கரையில் கிளிஞ்சல் பொறுக்கும் நேரம்
அலையலையாய் மனதில் எத்தனை சந்தேகம்
வானத்தில் தினம் வந்து போகும் சூரியசந்திரர்
நடந்த சுவடேன் தெரிவதில்லை பதியவில்லை
கரையை தொட்ட அலை எத்தனாவது அலை
அதற்கேன் அடையாளமில்லை வயதில்லை
கண்ணுக்கு மாற்றம் தெரியாதிந்நியதியிலே
வரலாற்றுப் பாதையிலே மனிதன் மட்டும்
எறும்பூறிய கல்லாய் காலடிச்சுவட்டினை
அழுந்தப்பதித்ததென்னே காரணமென்னே
ஏற வேண்டும் வாரிசுகள் ஏணியுச்சிக்கு
ஏற்றமிங்கு காண வேண்டும் மனிதகுலம்
ஒழியவேண்டும் மடமையும் சிறுமையும்
ஒழுக்கத்தின் பாதையில் ஒழுக வேண்டும்
சுகமும் சுபிட்சமும் நடுநிலை தராசிலே
ஏழ்மையில்லா நாள் இனி வரும் உலகிலே

ரகசியம்

உண்டோ சுவை உடனே கிடைக்கும் கனியில்
காத்திருந்து கனிந்தது இன்னும் இனிப்பாகுமே
ரகசியம் இல்லா இடத்தில் ஆர்வம் தீர்ந்திடுமே
இலைமறை காய்மறை தூண்டும் துடிப்பினை
வெட்டவெளிச்சமாய் காட்டியது எட்டுமோ
பொத்திப் பொத்தி வைத்ததெல்லாம் பொன்னே
மோகம் முடியும் கதையல்ல புதையல்தானே
மர்மத்தால் அதை மூடி காத்திடு பெண்ணே

ஆசை

மேய்ச்சல் களம் இன்று முழு உலகம்
முன்பில்லாத அற்புதமான பொற்காலம்
ஆசைப்படு அத்தனைக்கும் ஆசைப்படு
கதவை திறந்து வை வாய்ப்பு வரும்
ஆஸ்தியென இருக்குமே கொஞ்சம்
ஆயுளுக்கும் கட்ட கடன்கள் மிஞ்சும்
அனுபவிக்க சந்தை நிறைய பண்டம்
வாங்கி அடுக்கு ஆகிவிடாது தண்டம்
வரவு எட்டணா செலவு பத்தணா
வாழ்வியலில் ஒரு புது தத்துவம்

அடுக்குமா

தானே நின்றன கால்கள்
முந்தானை பிடித்திழுக்க
மூணுமுடி போட்டவனா
முழு உரிமையேதடா
தாராளமாய் நிறுத்துகிறாய்
மோகனமாய் சிரிக்கிறாய்
அருகிலே அழைக்கிறாய்
அடுக்குமா உன் செயல்
ஆகுமா இத்துணிச்சல்
அடாவடி செய்வாயோ
அழகான சேலையிது
அவரது ஆசைப் பரிசு
முள்ளால் கவ்வுகிறாய்
ஆசை ரோஜாச்செடியே

முதுமையில் சுமை

தேய்ந்து தேய்ந்து வளர்ந்து வளர்ந்து
அன்றும் இன்றும் அதே நிலா
அதைக் காட்டி அன்னம் ஊட்டி
வளர்த்திட மாதொருத்தி கையில்
பிள்ளைகள் அன்றும் இன்றும்
அற்றை திங்கள் அவ்வெண்ணிலவில்
அவள் தோள்களோ இளம் மூங்கில்
இற்றை திங்கள் இவ்வெண்ணிலவில்
இற்றுப் பொடித்து வலுவிழந்ததுவே
மூட்டும் இடுப்பும் இளைப்பாற எண்ண
இளம்பெண்கள் ஏற்றிய சுமையில்
இக்கட்டொன்றில் நிற்பர் குமைந்து
பெற்றால் பாவம் பிறந்தால் பாவம்
கலிகாலத்தில் எது ரொம்பப் பாவம்

நவீன சித்திரம்

ஆக வேண்டிய காரியமெது
போக வேண்டிய பாதையெது
சொல்லித்தர தேவையில்லை
சும்மாதான் ரசிப்போமே
பேறுக்கு ஆசைப்பட்டு
பேருக்கு பெற்றெடுத்து
காப்பகத்தில் ஒப்படைத்து
விடுதியிலே வளரவிட்டு
வெளிநாடு அனுப்பிவிட்டு
பெற்றோருக்குக் காட்டிய
முதியோர் இல்லம் ஏகிட
நவீன குடும்ப சித்திரமிது

வியாபாரம்

மோனையிலே இருக்கு நாட்டான் கடை
பொடி நடையா போன பொம்பள அங்கே
முருங்கைகாய முறுக்கிப்பாத்து எடுத்தா
காம்பை ஒடச்சி வெண்டைகாய சேத்தா
ஆத்தி மீந்த கழிவை யார் வாங்குவா
அடுத்து வருவாரு கூச்சத்தொட ஆம்பள
அவர் பையில் அதையெல்லாம் தப்பாம
அடைச்சி அனுப்புவாரு கடைக்காரரு

நிவாரணப்பணி

வினோதம்தான் உண்மைகள் வெளிப்படும் விதம்
காராக்கிருக இருள் அகன்று ஒளி புகுந்தால்
கண்கள் கூசி மூடாமல் என்ன செய்யும்
புதிய ஒளிக்கு பழகும் வரை திக்குமுக்காடல்
காய்ந்து வரண்ட மண்ணில் வீழும் நீர்த்துளி
காணாமல் போகுமே தாகம் தீரும் வரை
மூச்சடக்கி கிடந்தபின்னே வீசும் தென்றல்
முதல் நொடிகளில் திணறல் தந்திடுமே
விடுதலை அடைந்த கால்கள் வெறிகொண்டு
ஓடுமோ பந்தயக்குதிரையாய் தலைதெறிக்க
மாட்டுத்தொழுவில் அடைந்து கிடந்தவளை
அவிழ்த்து விட்டதிலே கூண்டுக்கிளிக்கு
சுதந்திரம் கிடைத்ததிலே கண்மண் தெரியாத
ஆனந்தம் அதுவே தந்ததே ஒரு போதை
எதிர் கடைசிக்கு ஓடும் கடிகார பெண்டுலம்
ஊசலாடி ஓடி ஓய்ந்து நடுநிலை காணுமே
புதுவெள்ளம் கரையுடைத்து செல்லும் போது
சேதாரம் இல்லாமல் போவதில்லையே
நிவாரணப்பணிதன்னை துவங்குவோம்
நன்னாளில் நங்கையர் துலங்குவோம்

நேரம்

நாளிலே நல்லதும் கெட்டதும் உண்டோ
நாளும் கோளும் நல்லதை தடுக்குமோ
நாளும் கிழமையும் தேடுதல் தகுமோ
உலகமயமான நாளிலே கடிகாரமும்
நாட்காட்டியும் நாடுதல் முறையோ
ஒன்றே செய் நன்றே செய் இன்றே செய்
என்றே உரைத்தவர் நாள் பார்க்கவில்லை
நேரம் பார்க்கவில்லை கருமம் செய்ய

தூரம்

தூரம் என்பதும் தேவைதானோ
இரு இருப்புப்பாதை இரும்பிடையே
மோதக்கூடும் கிரகங்களிடையே
சக்தியுடைய காந்தங்களிடையே-
இடைவெளி மதிப்புடைத்து
இடை வெளி போலவே
எட்டாதது இனிக்கும் எண்ணத்தில்
புளிக்கும் ஞானம் வந்தபின்னே

Thursday, March 18, 2010

சுமையா சுகமா

விட்டது தொல்லை என்றிட
சட்டை இல்லை சம்சாரம்
கழற்ற முடியாத பாரம்
பயணம் ரொம்ப தூரம்
சுமையை மறந்து சுற்றிப்பார்
சுகமாய் மாறும் சுற்றுலாவாய்

தடம்

வெள்ள நிவாரணமாய் அகதிகட்கு வழங்குவர்
அவசரகோலத்தில் கிளறிய ஓர் களி உணவு
அது போல் உள்ளதென்றிடுவார் துணைவர்
திடீர் பொடியில் உருவான புளியோதரையை-
காயம் மணக்க பூண்டு மிதக்க
கடுகு உளுந்து கடலைப்பருப்புடன்
தாளித்த வத்தலும் கறிவேப்பிலையும்
நல்லெண்ணெய்யில் நீந்த பாங்காக
புளிக்காய்ச்சலை பதமாய் சமைத்து
நாவின் சுவையரும்பை ஒரு தடத்தில்
பதித்திட்ட மாமியாரின் பாதையினின்று
பிறழ நினைத்தால் நிகழும் பிரளயமே!

தென்றல்

போதுமே உன் கொஞ்சல்
மிஞ்சுதே உன் கெஞ்சல்
கலையுதே என் கூந்தல்
நீ பொல்லாத தென்றல்

மறுபடியும்

பாதம் பார்த்து நடந்தாள் பதவிசாக
முட்டவில்லை மோதவில்லை யார் மீதும்
தலை நிமிர்ந்து நடக்கிறாள் நம்பிக்கையோடு
தலை குனிவை தடுக்க உத்தரவாதமில்லை
பாதம் பார்த்தவன் பரிசம் போட்டதறிந்தான் அன்று
பார்க்கும் கண்ணுக்கு பொருட்டில்லை பிறன்மனை இன்று
சமைத்த முறை சரியில்லையோ சுவை இல்லையே
மறுபடியும் முயற்ச்சிப்போம் மணக்கும் ருசிக்காக

மெய்

தானாய் யாரும் பிறப்பதில்லை
மெய்யிதுதான் பொய்யில்லை
மெய்யும் மெய்யும் கலந்ததினால்
மெய்யொன்று புதிதாய் உதிக்க
சந்ததி தொடரும் சங்கதியில்
புதிதாய் புரிந்திட யாதுமில்லை
புதிராய் அதிலே ஏதுமில்லை
பொய் வேடம் புனையும் மெய்யொன்று
புதுப்பூ ஒவ்வொன்றும் பூக்கும் போது
புதிதாய் உலகம் பிறந்தது போல்
உவகை உள்ளே ஊறி பொங்குதே
முதல் முறை போன்றே கிறங்குதே
சின்ன சீவனின் சிறு அசைவும் கூட
அலுக்காத அதிசயமாய் ஆவதென்னே
பழசே ஆகாத இப்புதுமையென்னே
சின்னக்கையை ஆட்டி சின்னக்காலை உதைத்து
சின்ன வாயை திறந்து பெரிதாய் அழுதபோது
பிறக்கின்ற பேரின்பத்திற்திங்கு நிகரேது

மதுரையம்பதி

திகழ்கிறது தமிழ் மணம் திரும்பிய திசையெங்கும்
போட்டிக்கு வருமே மொட்டவிழும் மல்லிமணம்
திருவிழா கோலந்தான் தினந்தோறும் தெருவிலே
தென்பாண்டி தென்றலோ தெளிந்த தேன் போலே
நகரத்தின் நண்டு சிண்டுக்கும் நக்கல் வரும்
நயமான சொல்வித்தை நடுங்காத நெஞ்சுறுதி
முத்திரைதான் பலவுண்டு பங்கய மலரழகோடு
பண்பு பழகு மாந்தர் வாழ் மதுரையம்பதியிலே

முரண்

முரணிலியாய் மனைவியா?
முள்ளில்லாமல் ரோஜாவா?
பல்லில்லாமல் சீப்பா?
உப்பில்லாமல் ஊறுகாயா?
தாரத்தின் முரண்நிறை குணமே
திருமண வாழ்வின் நறுமணமே
ஆதாரமானதோர் காரத்தின்
தரமும் சுவையும் ஆஹா! ஆஹா!

பையா

ஒவியம் என்றா சொன்னாய்?
விற்றுவிட மாட்டாயே?
கவிதை என்றா சொன்னாய்?
டீக்கடை திரைப்படப்பாடலா?
சிலை என்றா சொன்னாய்?
வேலை வாங்க மாட்டாயோ?
உருப்போட்டு பேசுகிறாய்
உள்ளத்தை தொலைத்துவிட்டாய்
என்னைப்பார்க்கும் போதே
கண்ணை எங்கே ஓட்டுகிறாய்?
சுண்டல் வாங்கி தின்றுவிட்டு
காசை கொடுக்கச் சொல்கிறாய்
அள்ளிக்கொள்ள அலைகிறாய்
நாளை எங்கு செல்லுவாய்?
காந்தர்வம் வேண்டாம் பையா
பரிசம் போட உறவோடு வா

திரவியம்

சிலையா இது சிலையா
ச்லைதான் பொற்சிலைதான்
கொல்லன் கைபடாத சிலை
கொஞ்சும் அழகு பொங்கு சிலை

பூவா இது பூவா
பூதான் புத்தம்புது பூதான்
மண்ணில் விளையாத பூ
மயக்கும் சிரிப்புடை பூ

தேனா இது தேனா
தேனேதான் இது தேனேதான்
மலரின் மடியறியா தேன்
மனமினிக்கும் நறுந்தேன்

திரவியமா இது திரவியமா
திரவியந்தான் தேவலோக திரவியந்தான்
தேடக்கிடைக்காத திரவியம்
தொட்டிலில் கண்ட திரவியம்

அத்வைதம்

நானும் நீயும் போட்டியிட்டோம்
நாளும் கிழமையும் தொடர்ந்து
நடுப்பகலில் சளைக்காமல்
நள்ளிரவில் தலை சாய்க்காமல்
நாகமும் சாரையுமாய் சீறினோம்
நகமும் சதையுமாய் சேர்ந்தோம்
வடக்கும் தெற்குமாய் வாழ்ந்தோம்
காந்தத் துருவங்களாய் ஈர்த்தோம்
களைக்காமல் போரிட்டோம்
களிப்போடு கை கோர்த்தோம்
ஆண்டுகள் இத்தனை உருண்டு
அனுபவங்கள் பற்பல கண்டு
நம் நன்மக்கள் பார்வையில்
துவைதம் தொலைத்து
அத்வைதம் விளக்கி
அம்மையப்பர் ஆனோமே

அறிவுரை

ஆராதிக்கிறேன் என்பான் ஆண்மகன்
அள்ளிச் சொறிவான் பேரன்பினை
சொல்லில் தேனைத் தடவுவான்
சொக்கும் வாக்குகள் வழங்குவான்
சின்னச் சின்ன சேவைகள் செய்வான்
சிறையெடுத்துச் செல்லத் துடிப்பான்
ஊரை மறந்தேன் உறவை துறந்தேன்
உனக்காக உயிரைக் கொடுப்பேன்
அத்தனை அழகான பொய்களையும்
அசங்காமல் போற்றிடு பெண்ணே
திருநாளை அழைத்து வரச்சொல்
மங்கல நாணை பூட்டிக்கொள்
குழந்தையாகவே இருந்திடுவான்
குழம்பாமல் உன் மடி கொடு
காடு வரை ஆதரவாய் கை கொடு
காலத்தோடு காமம் கரைந்தபின்னும்

மனம்

மனம் ஆகிடும் சொர்க்கமோ நரகமோ
மெல்லிய கோடுதானதை பிரிக்குமோ
மலர்களங்கு பூக்குமோ மணக்குமோ
முட்கள் மண்டி புதராய் கிடக்குமோ
மந்தமாருதம் தவழ்ந்து கொஞ்சுமோ
மின்னல் இடியோடு புயலடிக்குமோ
மாலைமதியின் மந்தகாசமிருக்குமோ
மருகி வேகும் பாலையாயிருக்குமோ
மறுமலர்ச்சி கொண்டுவர முயலுமோ
மடமையில் மூழ்கித்தான் கிடக்குமோ
மரியாதை மதிப்பென்று உயருமோ
மமதையில் அழுந்திக் கிடந்திடுமோ
மார்க்கம் அறிந்து முக்தியடையுமோ
மூடகத்தில் முடங்கிப் போகுமோ
மல்லி முல்லை பூத்த நந்தவனமாய்
மனிதராய் பிறந்தோர் மாற்றுவோம்
மாக்களலல்ல மாண்புடை பிறவிகள்
மறவாதிதை மரபாகக் கொள்வோமே

வாய்

வாயுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்
ஆயினும் நுணலும் தன் வாயால் கெடும்
தாயும் சேயும் ஆனாலும் வாயும் வயிறும் வேறு
வாயைக் கட்டி வயிற்றைக்கட்டி பிழைப்பதும்
தாயை சேயை உறவை வாழவைக்கத்தானே
கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுவதில்லை
செவிக்குணவு இல்லாத போது மட்டும்
வாய்க்கு மெல்லும் வேலை தரவேண்டுமாம்
வாயை மூடிக்கொண்டிருந்தால் கலகமில்லை
வாரம் ஒர் நாள் நாளில் சில மணித்துளி
மௌனம் காத்தனர் மகாத்மாக்கள்
வாயை காத்து வளமாய் வாழ்வோமாக

Wednesday, March 17, 2010

பொறுத்திருப்போமோ

லேசா விடலாமோ இதை
போகக்கூடாத இப்பாதை
புலியைப்பார்த்து பூனை
சூடுபோட்டால் வரி விழுமா
வலியோடு வடுவாகுமா
யானையைப்போல் பூனை
தின்றால் உடல் வளருமா
வயிறு வெடித்துப் போகுமா
ஹாலிவுட் தரத்திற்கு திரையுலகை
அழைத்துச் செல்வதாகச் சொல்லி
இழுத்து செல்வது பாதாளத்திற்கு
தரமறியா கலைச் சேவை
பொறுப்பில்லா பொருளாசை
பிஞ்சு நெஞ்சில் நஞ்சை புகட்டிட
வளரும் கால்களை முடமாக்கிட
நாளைய நாட்டை கோணலாக்கிட
நல்லதோர் வீணையை நலம் கெட
புழுதியில் எரிந்திட பார்த்திருப்போமோ
பிள்ளைகள் சீரழிய அனுமதிப்போமோ
பிழைகள் பெருக பொறுத்திருப்போமோ

களை

மேலை கீழை நாகரிக சுழற்சி
தலை கீழாய் மாறிட முயற்சி
ஆண் பெண் இடையே கவர்ச்சி
அந்தரங்கமான அம்மகிழ்ச்சி
கடைச்சரக்காய் இன்றாச்சி
மூணு இலை விடலை முளைச்சி
விடலையெல்லாம் வெம்பியாச்சி
கலி ரொம்பத்தான் முத்திப்போச்சி
களமிரங்கி செய்வோம் ஆராய்ச்சி
களையெடுத்து ரொம்ப நாளாச்சி

உள்ளபடி

தனமிருந்தால் மனமுவந்து செய்திடு தானம்
தரணியிதிலே சோர்வின்றி தேடிடு ஞானம்
மோரும் இளநீரும் வேனிலுக்குகந்த பானம்
மௌனத்தில் கசிந்திட காதுக்கினிய கானம்
உருகத்தெரியா கல்மனம் என்றுமோர் ஊனம்
உண்மையில் நாட்டம் தருமே நல்ல நிதானம்

(ஆ)தாரம்

உரிமையாளன் ஆகிறான்
ஊரறிந்த காவலன்,
மூணு முடி போட்டவன்,
முழு குத்தகை எடுத்தவன்,
வேலியிட்டு காக்கிறான்,
விளைநிலமாய் ஆனவள்
உழுது, விதைத்து,
நீர்விட்டு,களையெடுத்து,
உரமிட்டு உழைத்தவன்
மனம் குளிரச் செய்பவள்,
விளைச்சலை தருபவள்,
வீட்டை நிறைப்பவள்,
ஆதார சக்தி அவள்.

ஆதார சுருதி

ஆணுக்கு முன் வர அஞ்சி
தூணுக்கு பின் ஒரு வஞ்சி
வீணுக்கு வீம்பிலே விஞ்சி
நாணும் சிகப்பை மிஞ்சி
பேணும் மஞ்சள் கொஞ்சி
எல்லாமே கபட நாடகம்
சொல்லாத சுகத்தின் பாடம்
தள்ளி நின்று தவிக்கவிட்டு
அள்ளிக் கொள்ள ஆசை வர
அமைதியாய் ஆழம் பார்த்து
ஆழத்திலே அமிழ்த்தும் கள்ளம்
அணை உடைக்கும் வெள்ளம்
பாயக் காத்திருக்கும் பள்ளம்
ஆழம் காணா ஆழி உள்ளம்
ஆளத் தெரிந்தவன் சூரன்
மீள முடியாத ஓர் வீரன்
எழுதாத காதல் காவியம்
முடியாத போக பாக்கியம்
விலகி விலகி சேர்வதும்
அலை கரை தொடுவதும்
தீராத ஓர் விளையாட்டு
உயிர் பாடும் பாட்டு
உலக லயமே மெட்டு
உய்யுது புதுப்பிக்கப்பட்டு
மாறுகின்ற பாணியிலும்
வற்றிடாத கேணியது
அவசரமாய் ஓடும் போதும்
அவசியமாய் உணருவது
நழுவுகின்ற நாட்களிலும்
நயமாய் தழுவாது தீராது
உரத்து பேசும் ஒலிக்குள்ளே
ஒளிந்து கிடக்கும் உள்ளொளி
ஒழிந்து விடாத மரபு அது
ஒளிக்காத உள்ளத்திலே
ஒழியாத உயிர் ஈர்ப்பு
போட்டி போடும் போக்கிலும்
எட்டிப் போகாத ஓர் குணம்
தட்டிக் கேட்கும் போர்க் குரல்
கட்டிப் போடும் கசிந்த மனம்
கட்சி வேறாய் வேடம் கட்டி
கடைசியிலே சரணாகதி
கோலங்கள் மாறலாம்
காலங்கள் மாறாது

ஐந்து வரியிலே

1.வானத்தை நிலவுக்கு பட்டா போட்டதாரு?
கானத்தை குயிலுக்கு கற்றுத் தந்ததாரு?
பட்டாம்பூச்சிக்கு வண்ணம் தீட்டியதாரு?
மா,பலா,வாழையில் தேனைத் தடவியதாரு?
றாம் அறிவாம் அற்புதத்தை அளித்ததாரு?

2.தேனீக்கு யாரும் ஈமெயில் அனுப்புவதில்லை
பூக்கள் மலர்ந்து விட்டனவென்று
எறும்புக்கு யாரும் உளவு சொல்வதில்லை
உணவு இருக்குமிடத்தைப் பற்றி
வாய்ப்பைக் காண மனிதன் ஏன் கற்கவில்லை?

3.கொல்லையில் மருதாணிப்பூக்கள்
முல்லையின் வெள்ளை புள்ளிகள்
கொத்தாய் சம்பங்கி மலர்கள்
வெடித்த சோளமாய் மல்லிகை
கிறக்கம் பிறக்குது வீட்டினுள்.

4.இடி மேளம் தட்ட
காற்று நாயனம் ஊத
மின்னல் ஒளி அமைக்க
கானமாய் மழை கொட்ட
வான மேடையில் கச்சேரி

5.எரியாத விளக்கு
எழுப்பாத கவிதை
ஈயாத செல்வம்
மணக்காத பெண்மை
இவையெல்லாம் வீணே

6.பாவாடை தாவணி போனது
நிலத்தில் பார்வை போனது
தனிமை பயம் போனது
தாய்மை ஆசை போனது
பெண்மை எங்கே போனது?

7.விடியாத இரவு இல்லை
எட்டாத உயரம் இல்லை
தளராத தேகம் இல்லை
தூங்காத உயிரும் இல்லை
வலிகள் நிரந்தரமில்லை

8.கொட்டும் மழை இரவில்
மின்வெட்டு ஆனதில்
மெழுகுவத்தி ஒளியில்
பைசாச நிழல்களில்
திகில் கூட இனிக்கிறதே

9.காதோரம் வெள்ளைக் கோடுகள்
வசந்தம் முடிந்த சுவடுகள்
முதலில் லேசாய் அதிர்ச்சி
அப்புறம் கொஞ்சம் மகிழ்ச்சி
அதுதான் அறிவின் முதிர்ச்சி

10.கிணற்றில் நீர் சேந்தவில்லை
குனிந்து நிமிர்ந்து கூட்டவில்லை
ஆட்டவில்லை அரைக்கவில்லை 11.சமைக்கவும், துவைக்கவும், வீடு துடைக்கவும்
சம்பளம் கேட்காத ஆள் வேண்டும்
வம்சம் விளங்க வாரிசு வந்திட வேண்டும்
வீடு, மனை, வாகனம் இலவசமாய் வேண்டும்
“மண்மகன் தேவை” விளம்பரம் வழி காட்டுமே

12.பெண்ணைப் புழுவாய் நினைக்காதே
பூச்சியாய் நினைத்து நசுக்காதே
நச்சாய் வார்த்தை கொட்டாதே
மலிவாய் எடையும் போடாதே
சாது மிரண்டால் காடு கொள்ளாதே

13.கலையாத கனவு இல்லை
குலையாத கோலம் இல்லை
ஏங்காத உள்ளம் இல்லை
இல்லைக்கு எல்லை இல்லை
தெளிந்தால் துன்பம் இல்லை

14.ஆண் வாடை அடிக்காமல்
அவன் அணுவை ஏற்காமல்
அம்மாவாகிடப் போகிறாள்!
விந்தையா? விபரீதமா?
விஞ்ஞான ஆராய்ச்சியே!

15.சித்தி மாமா கிடையாது
தம்பி தங்கை கிடையாது
ஒத்தைப் பிள்ளைதானடா
ஒட்டி உறவாட யாரடா?
நட்பே நாளைய உலகம்

16.அக்னிக் குஞ்சு அவளடா
கணப்பில் சுகம் கண்டிரு
ஊதிப் பெரிதாய் ஆக்காதே
வீணில் எரிந்து சாகாதே
சாம்பலாகிப் போகாதே

17.பச்சை பசேல் புல்வெளி
காலை நேர பனித்துளி
அண்டம் முழுதும் கொட்டிக்
கிடக்குது கோடி அழகு
ஒவ்வொன்றும் ஓர் கவிதை.


வயதோடு கூடவே எடையும் கூடியதே
“வாயைக்கட்டு வயித்தைக்கட்டு” ஏழை போலே

சின்னச் சின்ன..

சிற்றெறும்பு ஊர்வதினால்
கல்லும் தேய்வதுண்டு
சிறு துளியும் சேர்வதினால்
வெள்ளம் வதுமுண்டு
சிற்றுளியும் செதுக்குவதால்
பாறையும் சிலையாகுமே
சிற்றடியை பதித்துத்தான்
நீள் பயணம் நிகழுமே
சிறு பொறியும் பற்றித்தான்
பெருந்தீயும் மூளுமே
சிறு விதையும் வெடித்துத்தான்
பெருமரமும் வளருமே
சிறு சாவி ஒன்றுதான்
பெரிய கதவை திறக்குமே
சிறிய துவக்கம் ஒன்றிலே
பெரும்புரட்சி வெடிக்குமே
சின்னச் சின்ன யத்தனங்கள்
உறுதியான அடித்தளங்கள்
உன்னதமான மாளிகைகள்
கட்டிடலாம் வாருங்கள்

எங்கள் தாயே

கண்ணீர் சொரியும் வானமே!
கனம் குறைந்த கவலையா?
கருமை கொண்டாய் முகத்திலே
அருமை தெரியா பேதையே!
ஆதவன் பிரிவில் ஏக்கமா?
அதுதான் உனது துக்கமா?
வருவான் விரைவில் வருந்தாதே
தருவான் கடல்நீரை தானமாய்
திருப்பிக்கொடு அதை தரணிக்கு
தயை மிகுந்த எங்கள் தாயே!

என்னால் முடியும்

புதுநெல்லாய் ஒரு வீட்டில் முளைவிட்டு
புதுநாத்தாய் மறுவீட்டில் வேர்பிடித்து
தன்னிகரில்லா தமிழ்மண்ணின் சீதனமாய்
குலமகளாய் குத்துவிளக்காய் துலங்கிடவும்
என்னால் முடியும்.

தோளோடு தோள் நின்று துணைவருடன்
வீணாக மோதாமல் நெறி தவறிப் போகாமல்
கொண்ட காதல் மாறாமல் இல்லறத்தை
இருமாடிழுக்கும் வண்டியாய் கண்டிடவும்
என்னால் முடியும்.

பாலோடு சோறோடு பல கதைகள் பிசைந்து
பருப்போடு நெய்யோடு நீதி நெறிகள் கலந்து
வயிறார உண்ண ஊட்டுவேன் என் குழவிக்கு
வருங்கால பயிரினை வளமாக வளர்த்திடவும்
என்னால் முடியும்.

பருவத்து காய்கனியை பாங்காக வாங்கிவந்து
பக்குவமாய் மிதமான உப்பு உரைப்போடு
சுவையாய் சத்தாய் கேடின்றி சமைத்திடவும்
நோயற்ற வாழ்வெனும் செல்வத்தை நல்கிடவும்
என்னால் முடியும்.

ஒருபிடி அரிசி அனுதினம் ஒதுக்கி வைத்து
ஒரு ரூபாய் காசை அடிக்கடி பதுக்கி வைத்து
கழித்த உடுப்புகளை பத்திரமாய் சேகரித்து
ஆங்கோர் ஏழையின் துயர் துடைத்திடவும்
என்னால் முடியும்.

அதீத ஆசை ஒழித்து தகாத இச்சை அழித்து
தகுதிக்கு மீறாது திட்டமிட்டு தாராளமாய்
வேண்டுவன கண்டு வேண்டாதவை இன்றி
மனமகிழ்வுடனே மனையாட்சி புரிந்திடவும்
என்னால் முடியும்.

அழகெது பாசமெது பண்பெது நீசமெது
பொருந்தாத பழக்கமெது வாழும் வகையெது
வக்கணையாய் நானுரைப்பேன் நயமாகவே
வடிவாக அதுபோல வாழ்ந்தும் காட்டிடவும்
என்னால் முடியும்.

தலை நிமிர்ந்து நடக்க வேண்டும் தாயகம்
தரணியெங்கும் நாட வேண்டும் நம் வழி
அனைவரும் பேச வேண்டும் ஒரு மொழி
அன்பென்ற அந்த மொழி கற்றுத்தந்திடவும்
என்னால் முடியும்.

இணையம்

அல்லும் பகலும் தூங்காதிருக்கும்,
ஆணையும் பெண்ணையும் கவர்ந்திடும்,
இண்டு இடுக்கிலும் நீக்கமற நிறையும்,
ஈர்க்கும் விதத்திலே போதைபழக்கமொக்கும்,
உலகை விரல் நுனியில் நிற்க வைக்கும்,
ஊர் வம்பிற்கும் உகந்ததோர் மேடை,
எண்ணங்களின் ஒப்பற்ற வாகனம்,
ஏவல் முடித்திடும் அற்புத பூதம்,
ஐயங்கள் தீர்த்திடும் அதிசய ஆசான்,
ஒலியும் ஒளியும் விருந்திடும் ஊடகம்,
ஓய்வு உழைப்பு இரண்டிற்கும் களம்,
ஔடதமாகும் தனிமைத் துயருக்கு,
அ·றிணை என்றதை எண்ண முடியவில்லை.

இனிப்பானது

ரகசியந்தான் எல்லாமே இவ்வுலகில்
யாருக்கு யாரென்பது தெரியாது
எவ்வளவு ஆயுளென்றும் தெரியாது
என்று எந்த இடத்தில் வசிப்போம்
எங்கே வாழ்வின் மகிழ்வறியோம்
புலன்களின் போக்கறியோம்
வளங்களின் பொருளறியோம்
இயற்கையின் வலியறியோம்
ஆராய்ச்சியின் இலக்கறியோம்
அடுத்த நிமிட நடப்பறியோம்
பிரபஞ்ச எல்லையறியோம்
எண்ணங்களின் ஆழமறியோம்
ரகசியங்களின் ரகசியமறியோம்
இதுதானே வாழ்வில் இனிப்பானது!

இயக்கம்

சொல்லாமல் கொள்ளாமல்
மின்னாமல் முழங்காமல்
கோடை மழை வந்தது
கொட்டி முடித்து சென்றது

கனம் குறைந்து போனதில்
வானம் தெளிவானது
குளித்துவிட்ட களிப்பில்
குளிர்ந்து விட்டது பூமி
இறுக்கம் தளர்ந்த காற்று
இளைப்பாறிக் கொண்டது

பிரளயம் பார்த்த பிரமிப்பில்
சிறகை உதறியது குருவி
புழு பூச்சி தேடி
புறப்பட்டுச் சென்றது

சேறாக ஆறாக
பெருகி வந்த மழை நீர்
பாதையோரம் படுத்திருந்த
பழுத்த இலையை
பச்சை இலையை
சம்மதம் கேளாமல்
சுமந்து சென்று
சேர்த்தது வேறிடம்

பத்திரமாய் பதிந்திருந்த
சின்னப் புல்லோ
மெல்ல நிமிர்ந்து
பெருமூச்சு விட்டது
பிழைத்துக் கொண்டேனென்று
தெருவோடு போகிற
ஒரு பசுமாடதன்
நுனி மேய்ந்து பசியாற
பெரிய வலியோடு
புரிந்து கொண்டது
கண்ணிகளை கோர்த்தவனின்
சாமர்த்திய கணக்கினை

ஒரு ஹைக்கூ

சட்டை போல் நேற்றை உரித்து உதிர்த்து
வெளியேறி அதைத் திரும்பியும் பாராமல்
ஊர்ந்து நகர்கின்றதே காலப்பாம்பு.

காசு

இருப்பு இல்லை வங்கியிலே,
இதயத்தில் பழுதில்லை,
இனிப்புன்ன தடையில்லை,
வெயிலும் மழையும் பொருட்டில்லை,
மெத்தப் படிப்பு படிக்கவில்லை,
மூன்று வேளை உணவில்லை,
நடைபாதை ஓரத்திலே,
நாற்றமடிக்கும் சூழலிலே
நாளை நகர்த்தும் குடும்பத்தில்
குறையில்லை குழப்பமில்லை-
கதகதப்பான கூட்டிலே
கவிதை போன்ற சுகமிருக்கு,
பாட்டிருக்கு சிரிப்பிருக்கு,
அடியிருக்கு அணைப்பிருக்கு,
நெருக்கமான உறவிருக்கு,
நேசமான மனசிருக்கு-
காசால் உலகை அளப்போர்க்கு
கருத்து ஒன்று இங்கிருக்கு.

காதலன்

அழைக்கின்றான் என்னை
உருவத்தைக் காட்டாமல்
குரல் மட்டும் கேட்கிறது
நினைவு தெரிந்த நாள் முதல்
நிழல் போல் தொடர்வது
நிச்சயமாய் தெரிகிறது
நேருக்கு நேர் முகம் காண
நெருங்கிய பல நொடிகள்
சந்திக்க நேராமலே
சங்கமம் நிகழாமலே
நழுவி விட்டன எப்படியோ
கண்ணாமூச்சி காட்டுகிறான்
கைப்பிடிப்பான் நிச்சயமாய்
என்னை ஒட்டி வரும் அவன்
என் ஒரே மெய்க்காவலன்
மெய்யான ஓர் காதலன்
என் உயிரை கேட்கிறான்
அடையாமல் விடமாட்டான்
கூடிட நானும் நாணி
ஓடி ஒளிவதை ரசித்தே
துரத்தும் ளவந்தான்
அவன் கையணைப்பில்
அமைதி காண வருவேன்
என்றறிந்து காத்திருக்கும்
ஏமாறாத எமகாதகனை
நீங்கா நினைவாய் னவனை
நிதமும் எண்ணி நகைக்கிறேன்
நிறைந்த மனதுடன் நிற்கிறேன்
மங்கல நாளிலே கைத்தலம்
பற்றிடுவான் என் கொற்றவன்

காதலர் தினம்

கட்டுண்டோம் உயிர்க் காதலிலே
கடந்து நின்றோம் காலத்தையே!
முந்நூத்தி அறுபத்தைந்து நாட்களிலே
முக்கியமாய் ஒரு நாள் ஆகிடுமோ?
நினைத்தா நான் தும்முகிறேன்?
யோசித்தா நான் சுவாசிக்கிறேன்?
தெளிவாய் தெரிந்த உண்மைக்கு
தேவைதானோ பிரகடனங்கள்?
உடலோடு ஒட்டி உறவாடும் ஆடையை
உதறி எறிந்து வேறொன்றை அணியலாம்
உடலின் ஆடையாய் ஆன தோலே
உனை நான் உதறுவதெங்ஙனம்?
உணர்வின் களமே! ஒன்றிய உறவே!
பிரித்துன்னை பார்ப்பதெங்கே?
கண்ணாடியும் பிம்பமும் ஆனோமே!
நிழலிழந்து போன நிசமிதுவே!
கடலோடு நதி கலந்த பின்னே
உப்பாகிப் போவதும் கூட
உவப்பான சங்கமம்தானே?
இரவறியோம், பகலறியோம்
இது போல வேறறியோம்
ஒன்றும் ஒன்றும் ஒன்றாகுமே
புது கூட்டலிது கூடலிலே
இன்றோடு முடிந்திடுமோ
ஆதி அந்தமில்லா இவ்வுறவு?
கரை தெரியா கால நதியில்
களிப்புடன் நீந்துமிரு மீன்கள்
கணக்கில்லாப் பிறவிக் கணங்கள்
துளிப்போல தனியொரு நாளிங்கே
துச்சமாய் தோன்றுவதுண்மை!

கடவுள்

கற்றது கையளவு கல்லாதது
உலகளவு என்றார் ஔவை,
புரிந்தது கடுகளவு புரியாதது
கடலளவு - எல்லோர் அனுபவம்;
பிறந்த குழந்தை இறப்பதேன்?
பிள்ளைப் பேறே இல்லாததேன்?
பிறவியில் ஊனமேன்?
அழகும் அறிவும் அரிதாய் இணைவதேன்?
இயற்கை சீறி அழிப்பதேன்?
பஞ்சம் வந்து வாட்டுவதேன்?
பகையும் போரும் நிகழ்வதேன்?
பிரிவும் துயரும் நேர்வதேன்?
குருவிக்கூடு கலைவதேன்?
பொல்லாத சோகம் வருவதேன்?
போகத்துடிப்போர் போவதில்லை,
வாழத் துடிப்போர்க்கு ஆயுளில்லை,
போட்ட கணக்கு தவறுகின்றது,
கொடியவர் திளைக்க, நல்லவர் துவள
சகியாத அக்கிரமங்கள் அரங்கேற
ஆண்டவன் இருக்கிறானா என்றரற்ற-
தடுமாறும் தருணங்கள் தரணியில்
எத்தனை எத்தனையோ!
எண்ணற்ற கேள்விக்கு விடையில்லை,
ஆனால் “அடடா இதற்காகத்தானா?”
என்று வியந்து சமாதானமாய் ஆக்கிய
சந்தர்ப்பங்கள், சம்பவங்கள் தாராளம்-
ச்சில்லச்சிஇரத்தில், பல பல்லாண்டு கழித்து;
சிக்கலான கணக்கானாலும் சீரான விடையுண்டு,
சிடுக்கான கூந்தலையும் சீவி முடிக்க வழியுண்டு;
நாடகத்தின் பாத்திரங்கள் நடிப்பதெல்லாம்
ஒத்திகை முடிந்த சரித்திர காவியங்கள்;
நுட்பமாய் பார்க்கையிலே பொம்மைகளாய்
ஆடுகிறோம் -சூத்திரதாரி இல்லாமலா?
நம் நலனை நினைக்கும் நல்லவன்
லயம் பிசகாத நியதி தப்பாத
பெருந்திட்டம் வகுத்தவன்
அணுவுக்குள் அடங்கி அண்டம் முழுதும் நிறைந்து
ஆடும் குழந்தையை கவனமாய் கண் எல்லைக்குள்
ஆடவிட்ட அளப்பறிய முடியா அன்புடைத் தாயாய்
பாலுக்குள் வெண்ணெய்யாய் ஒளிந்திருந்து
பம்பரமாய் ஆட்டிவிட்டு பார்த்திருக்கும்
பரமனை என் நாடியிலே, ஓடுகின்ற குருதியிலே,
விடுகின்ற மூச்சிலே இரண்டற கலந்தவனை
நான் ஆடிக்களைக்க காத்திருப்பவனை
காலுக்கு செருப்பாய் வெயிலுக்கு குடையாய்
காப்பவனை சாய்ந்து அழ தோள் கொடுப்பவனை
மௌனமாய் என் குறைகள் கேட்பவனை
ஔடதமாய் இருப்பவனை லயத்தில் இல்லாதவனை
அன்பான ஒரு சொல்லிலே, செயலிலே,
பார்வையிலே, சிந்தனையிலே
தரிசனம் தருபவனை தேடுவதோ?
காணாது வாடுவதோ?
பேரில்லா பெரியவனை
பெருவெளியில் நிறைந்தவனை
அருகே அமர்த்திக் கொள்ள
அளவளாவி அகமகிழ பயின்றிடு
அன்பின் மொழி நடந்திடு
அறத்தின் வழி ஒழிந்திடும்
பிறவி வலி, நானின் முகவரி.
ஆயுளுக்கும் பாதிப்பை தருகிறது,
பிரிந்ததேன்? இழந்ததேன்?
வாழ்வின் அர்த்தம் புதிரானதேன்?

கையேடு

யோசி
கட்டங்களை வட்டங்களைத் தாண்டி யோசி
மனித அடையாள கோட்டைத் தாண்டாமல் யோசி

புசி
ருசிக்கும் பசிக்கும் நிறைவாகப் புசி
நோயும் நோவும் நிறையாமல் புசி

வாசி
ரசித்தும் பகுத்தும் தேடி வாசி
கணநேர திருப்தி தேடாமல் வாசி

எழுது
உண்மையை உணர்வை ஒளிக்காமல் எழுது
கண்டனத்தை கண்ணியத்தில் ஒளித்து எழுது

தேடிடு
ஆக்கத்தை ஊக்கத்தை எங்கெங்கும் தேடிடு
அறிவை அமைதியை உன்னுள்ளே தேடிடு

வாதிடு
ஐயமும் அறிவீனமும் தொலைந்திட வாதிடு
நயமும் தெளிவும் தொலையாமல் வாதிடு

கூடிடு
நல்லதும் நட்பும் வளர்த்திட கூடிடு
வம்பும் வழக்கும் வளர்க்காமல் கூடிடு

விளையாடு
நட்சத்திர தூசி மேல் சறுக்கி விளையாடு
நிதானமும் கவனமும் சறுக்காமல் விளையாடு

களம் வேறு பெண்ணே

அங்கம் மறைத்து அழகை குறைத்து,
ஆணைப் பொலே ஆடை அணிந்து,
ஒசிந்த நடையை ஒரங்கட்டி,
தயங்கும் பாவனை தனையும் மாற்றி,
மென்மை களைந்து விறைப்பை புனைந்து,
சுயமாய் நின்று முனைப்புடன் முயன்று,
அறிவுத்திறன் அனைத்தும் காட்டி,
உயர்ந்த ஊதியம் தனையே ஈட்டி,
சாதனை சிகரம் சடுதியில் எட்டி-
உன்மத்த போட்டியின் முடிவிலே
ஆணுக்கு இணையாய் ஆகிவிட்டாயா,
இறுமாந்து நிற்கும் புதிய பெண்ணே?
அச்சம், நாணம் போன்றவை மறந்து,
ஈவு, இரக்கம், நளினம் குறைந்து,
கடின இனமாய்-ஆணாய்- மாறி,
பெண்மை தகைமை இழந்ததன்றி
பேறென பெரிதாய் பெற்றதென்ன?
வேறென உன் களமென்றறியாமல்
வீம்பில் வீணாய் விரயமானாய்.
வீரமுண்டு, வெற்றியுண்டு,
தாயே உனக்கு தனியிடமுண்டு.
தன்மை இழந்து போகாதே,
தனை மறந்து தணலில் வெந்து
தப்பான இலக்கை தேடாதே,
பெண்மை பொலிவை புதைக்காதே,
பேதையைப் போல வெதும்பாதே

கணக்கு

ஒன்றும் ஒன்றும் இரண்டென்பது பாலபாட கணக்கு,
ஒன்றும் ஒன்றும் மூன்றாவது வாழ்க்கைப் பாட கணக்கு,
தமிழை அலங்கரிக்கும் அணிகலன்களின் கணக்கு
இரண்டும், நாலும் அடங்கும் பதினெண்கீழ்கணக்கு,
பூச்யமும், ஒன்றும் மட்டுமே மின்னணு யந்திரக் கணக்கு,
பாவமும், புண்ணியமும் சித்ரகுப்தன் எழுதும் கணக்கு,
பிணக்கின்றி வாழ்வது தெளிவாய் இருப்பவன் கணக்கு,
புரியாதோர் போட்டு குழப்பித் திரிவது தப்புக் கணக்கு.

கண்களும் பெண்களும்

கயல் போல் கண்களில் கடலின் ஆழம்
கணை போல் கண்களில் மின்னலின் வேகம்
செய்தித்தொடர்பு யுகத்திற்கொரு கணணியெனின்
அதனினும் கடிதாய் கணக்கற்ற கட்டளை
கணத்தினில் முடிப்பவை கண்களன்றோ!
தானியங்கி தகவல் மையமன்றோ!
உள்வாங்கும் செய்திகள் எத்தனை?
வெளியிடும் விசயங்கள் எத்தனை?
கனிந்து நோக்கி கனலை தணித்திடும்
கடிந்து விழித்திடின் கயமை பொடிபடும்
கலங்கி கசிந்திடின் கல்லும் கரைந்திடும்
நேராய் நோக்கிடின் நலங்கள் நடந்திடும்
இவையும் செய்யும் இன்னமும் செய்யும்.

முகத்தின் ஒளியாம் கண்கள் போன்றே
வீட்டின் விளக்காம் பெண்கள் அன்றோ!
கண்கள் செய்யும் காரியம் யாவும்
பெண்கள் செய்திட கூடுமாகும்.
கண்களை இமைகள் காப்பதினால்
பார்வை பெற்றோம் பாதை கண்டோம்
பெண்களை உலகம் போற்றி வந்தால்
வீடு விளங்கும் குலம் தழைக்கும்
நங்கையர் நலம் நாட்டின் பலம்-
சிறு தூசும் கண்களை உறுத்தலாகாது
ஒரு தீங்கும் பெண்களை அண்டலாகாது
மலர்ந்து விரியட்டும் கண்கள்
மகிழ்ந்து மணக்கட்டும் பெண்கள்.

கண்ணே!

கண்ணே! கண்ணின் மணியே! மாங்கனியே!
நான் அடைந்த பாக்கியமே! பெரும்பேறே!
எனை மொய்க்கும் உன் கருவண்டு கண்கள்
காந்தம்தானோ, கனிந்த திராட்சையோ?
என் முகத்தை அழுத்தும் உன் கன்னங்கள்
மத்தால் கடைந்த புது வெண்ணெய்யோ?
என் கழுத்தை கட்டியிழுக்கும் உன் கைகள்
எனை கட்டிப்போடும் சங்கிலி தானன்றோ?
குயிலாய், குழலாய் கூப்பிடும் உன் குரல்
எனை அருகே வரவழைக்கும் ஏவலன்றோ?
உன் பொக்கை வாய் சிங்காரச் சிரிப்பிலே
உலகை ஆட்டி வைக்கிறாய் சர்வாதிகாரியே!

முடிவு

விடை பெற துடிக்கிறார்,
வேளை வரவில்லை-
தோலும் சுருங்கி
பல் விழுந்து
பார்வை மங்கி
காது கேளாது
நடை இல்லாது
மார்பு கூட்டில்
மூச்சை நிறுத்தி
நாட்கணக்காய்
மாதக்கணக்காய்
வருடக்கணக்காய்-
எதற்காக இந்த அவதி?
முன்னேற்றம் கண்டு
ஆயுளை நீட்டித்தது தவறோ?
வத்தலான உயிர்களை
அடைக்க முதுமக்கள் தாழி
என்றொரு ஏற்பாடு
முன்னாளில் இருந்ததை
ஏனோ மனம் நினைக்கிறதே!
உடலை பிரிய மறுக்கும்
உயிரின் புனிதம் எங்கே?
இறக்கத் துடிப்பவர்க்கு,
பார்த்துத் தவிப்பவர்க்கு
விடுதலை தருதல் கருணையே!

முரண்பாடு

பிள்ளை உள்ளம் வெள்ளை,
கள்ளம் அதிலே இல்லை.
ஒன்றும் தெரியாத சூன்யம்,
பார்க்கும் அனைத்தும் ரம்யம்,
பேதமில்லை, பிரிவில்லை,
எல்லாம் இன்பமயம்.
அறிவை அது வளர்த்தது,
நல்லது கெட்டது தெரிந்தது.
யோசனை அதிகம் செய்தது,
ஏன் என்றே கேட்டது,
தான் மட்டும் பிடித்தது,
நிம்மதி தூரம் போனது.
கற்றதனால் கலக்கமா?
அறிவேதான் பாவமா?
அஞ்ஞானம் திரும்புமா?
ஆனந்தம் கிடைக்குமா?
இது என்ன முரண்பாடு?
இதுவோ ஈசன் ஏற்பாடு?
முக்தியை அடையும் கவலை-
மூடராய், பித்தராய் ஆன நிலை.
மனதின் கறைகள் கறைந்து ஓட,
மீண்டும் மழலை பருவம் தேட,
தொடங்கிய வட்டம் முடிந்ததோ?
தொலைந்த சொர்க்கம் மீண்டதோ?

நாளை நல்ல நாள்

விட்டில் பூச்சிகள் விளக்கில் வீழ்ந்து மாயும்,
விடலைகள் அது போலின்று ஆனது பாவம்,
கவர்ந்து இழுக்குது புது நாகரிக மோகம்,
புகை, போதை, காமம், வன்முறை இவையே
இன்று வாழ்க்கைமுறை ஆனது எங்ஙனம்?
முளைத்து மூன்று இலை விடும் முன்னே
முழுதும் திளைத்து பின் அதுவும் புளித்து
நூலறுந்த பட்டமாய் அலைவது என்னே?
திக்குத் தெரியாத காட்டில் திரியும்
திசை மாறிய இந்தப் பறவைகள்
திரும்பிட வேண்டும் திருந்திட வேண்டும்.
விலகாத கிரகணம் உண்டா?
விடியாத இரவும் உண்டா?
நாளை நிச்சயம் நல்ல நாள்.

நாளுக்காக

நாளுக்காக காத்திருக்கிறோம்,
நாட்காட்டி தாள்களை பாத்திருக்கிறோம்,
உருவான கரு வளர்ந்து உலகிற்கு வரும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
பேருக்குப் பின் இரண்டெழுத்து போட முடியும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
காலை ஊன்றி நிமிர்ந்து நிற்கும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
நல்ல துணையுடன் வாழ்க்கை பயணம் தொடங்கும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
கடமைகள் ஒவ்வொன்றும் முடியும்
நாளுக்காக காத்திருக்கிறோம்,
காலத்தின் மடியில் கண்ணயரும்
நாளுக்காக காத்திருக்கிறோம்-
எத்தனை எத்தனை சிகப்பு நாட்கள்,
மனிதன் வாழ்வில் மிக முக்கிய நாட்கள்,
ஆசையை, எதிபார்ப்பை கூட்டும் நாட்கள்,
கூட்டி, கழித்து மிகச் சரியாகவே
முடியுமே வாழ்க்கையெனும் கணக்கு.

நடைமுறை

போருக்கு அவளிடம் எத்தனை ஆயுதம்!
வில்லாய் வளைந்த புருவங்கள்,
வாளாய் கூரிய மைவிழிகள்,
மூக்கின் நுனியில் விடைப்பு,
சிவந்த இதழ்களில் துடிப்பு,
உடல் நெடுக ஓர் விறைப்பு,
கொல்லாமல் கொல்லும் மௌனம்,
வெடிக்கும் எரிமலை இவளோ?
வியூகத்தில் சிக்கிய அபிமன்யுவானேன்,
துளைக்கும் அம்புகள் பெய்திடும்,
தப்பிக்கும் வழியும் கண்டிலேன்,
பிழையென்ன செய்தேன் புரிந்திலன்,
பேசிப் பயனும் இருந்திடாது,
பேசாது பிணக்கும் தீராது,
ஊடல் என்பது நரகந்தானே,
கூடல் இனிக்க வழியுந்தானே.

நலம்

வாய்ச்சொல் தேவையில்லை
வார்த்தையில் சாரமில்லை
வாதத்தில் புரிவதில்லை
வேதத்தில் விளக்கவில்லை
மோனத்தில் மூழ்கிடு
“நான் யார்?” என்றிடு
மனதை மூடிவை
நினைவை நிறுத்திடு
நிச்சலனம் பழகிடு
நித்தியத்தில் கலந்திடு-
உலகின் தொடர்பறுத்து
தனியே தன்னந்தனியே
சுயம் காண விழைந்து
சுற்றம் மறந்து
சொந்தம் துறந்து
புறத்தை தொலைத்து
ஞானம் அடைந்து
விளைந்ததென்ன?
விளங்கியதென்ன?
விளக்கியதென்ன?

உலகில் கலந்து
உயிர்களை நேசித்து
உணர்வுடன் விரைந்து
வலிகள் களைந்து
துயர்கள் துடைத்து
ஓயாது உழைத்து
மனதை திறந்து
நினைவை நிறைத்து
அறிவை வளர்த்து
மகிழ்வாய் சிரித்து
வாழ்வது தவமா?
பிறவியின் பயனை
அடைவது நிசமா?
கடமைகள் தருவது
கைமேல் பலனா?
“நான்” உள்ளேயா?
நாடிக் கொண்டாடும்
பரந்த மானிடத்திலா?
“நான்” மட்டும் உய்வதா?
“நாம்” என்பதின்பமா?
சுயமா? பொதுவா? நலமெது?

நண்பன்

கூறத்தான் வார்த்தைகள் போதாது
கோடி கொடுத்தாலும் கிடைக்காது
மாறாத மறக்காத பற்று அது
கொஞ்சமும் குறையாத பாசம் அது
நிலையான நிறைவான நட்பு அது
தடையின்றி பிரவகிக்கும் ஊற்றது
கணமும் கவனம் கலையா காவலது
துடிப்பாக ஓடி வந்து நிற்கையிலே
வெறித்தனமாய் கொஞ்சுகையிலே
அறிவோடு கண்கள் பார்க்கையிலே
ஆவலாய் காத்திருக்கும் பாவத்திலே
வாலை ஆட்டும் வேகத்திலே
திருப்பி ஆட்டி மகிழ
வாலில்லாதது குறையே.

நிலவு

கண்ணால் உன்னை காணாமல்
பிறையாய் தேய்ந்து போனேனே
காதில் உன் மொழி கேளாமல்
உப்பாய் கரைந்து போனேனே
தூது ஒன்றும் கிடைக்காமல்
கற்பூரம் போலாவி ஆனேனே
அருகில் உன்னை இருத்தாமல்
ஆவியை தொலைத்து விட்டேனே
இங்கு அருவமாய் ஆனவளை
வெறுங்கூடாய் போனவளை
தேடி நீ வருவாயோ?
தேவையை அறிவாயோ?
திரும்புமோ என் உயிரும்?
வளருமோ என் உருவும்?

ஒரு சந்திப்பு

பொழுதும் போகாமல், வேலையும் இல்லாமல்,
அன்றொரு நாள் நான் தவித்த வேளையிலே,
அருமையாய் உதித்ததொரு யோசனையிலே,
அணுகினேன் இண்டர்நெட்டை-
கவனமாக குறித்து வைத்த விலாசம் தேடி
ஆவிகள் உலகினுள் புகுந்துவிட்டேன்.
நீந்தினேன், துழாவினேன்;
ஆகா! அகப்பட்டார் என்னருமை பாரதி.
அடடா! யுகப்புரட்சி தந்த கவியின்
மனம்தான் கனத்துக் கிடந்ததே,
வெந்து, நொந்து தவித்ததே,
மடை திறந்த வெள்ளமாய்
குமுறல்கள் வெடித்ததே!
அறியாத நானுமே அப்பாவியாகவே
ஆரம்பித்த விதமிது:
“ஐயா! பார்த்தீரா, உமது புதுமைப் பெண்ணை?
பட்டங்கள் பெற்று, சட்டங்கள் செய்து,
நேர் கொண்ட பார்வை, நிமிர்ந்த நன்னடை...”
நிறுத்தினார் என்னை அவசரமாக-துயர மொழியுடனே.
“போதும், போதும். என் நெஞ்சு பொறுக்குதில்லையே!”
அதிர்ந்தேன், தொடர்ந்தேன்:
“ஏது பிழை? தங்கள் கருத்துப்படிதானே கனிந்து வந்துள்ளது?”
“இல்லை, இல்லவேயில்லை. இதுவல்ல என் எண்ணம்.
இந்தப் பட்டங்கள்...இந்தச் சட்டங்கள்...
இந்தப் பார்வையும், நடையும் - ஐயோ! கூசுதே!”
“இது என்ன அநியாயம்! ‘சின்னஞ்சிறுகிளியே, கண்ணம்மா,
செல்வக்களஞ்சியமே’ என்று வக்கணையாய் பாடினீர்;
வரிசையாய் கிளிகளும் உலகினில் ஏற்றம் புரிந்தே
செல்வக் களஞ்சியமாய் மாறவில்லையோ?”
“கொடுமை! கொடுமை! கொடுமையிலும் கொடுமை!”
“பேசும் பொற்சித்திரமாய், ஆடிவரும் தேனாய்
ஓடி வருகையிலே உள்ளம் குளிருதே?”
“யாருக்கு?”
“உச்சிதனை முகந்தால் கருவம் ஓங்கி வளருது,
மெச்சியுனை ஊரார் புகழ்ந்தால் மேனி சிலிர்க்குது.”
“மேலே நானே சொல்கிறேன்:
கன்னத்தில் முத்தமிட்டால் கள்வெறி,
கட்டித்தழுவினால் உன்மத்தம்- கண்டவனுக்கும்.
நான் கண்ட கண்ணம்மா
கொண்டவன் மணமேடையில் நாயகி,
பாரார் பார்க்க வெட்டவெளி காட்சிப் பொருளல்ல.”
“தளைகளை உடைத்து எறியச் சொன்னீர்,
விடுதலையாகி வீட்டை விட்டு வெளியேறச் சொன்னீர்.”
“அச்சம், நாணம், மடம், பயிர்ப்பு இவை எதற்கு?
புதிய முகம் உனக்குண்டு,
போகத்திற்கும், உபயோகத்திற்கும்
வீட்டுக்குள் அடைந்து கிடந்தது போதுமென்றேன்.
சுதந்திரப் பெண்ணை முழுதாய் வரைந்தேன்;
இன்றோ அவள் ஒரு முழு அடிமை.”
“புதுக் கதையன்றோ புனைகின்றீர்?”
“உச்சி முதல் பாதம் வரை
அழகுப் பதுமையாகிட எண்ணுகின்றாள்;
அழகுச் சாதனங்கள் வாங்கி குவிக்கின்றாள்.
வியாபார முதலைகள் விரித்த விளம்பர வலையிலே
வழுக்கி விழுந்து விட்டாள், மீள வழியும் இல்லை.
புருவத்தை மழித்து வரைந்தாள்,
இதழுக்கும், நகத்திற்கும் வண்ணம் தீட்டினாள்,
அளவான அங்க அமைப்போடு
ஆணின் ஆசைக்கு ஆடுகிறாள்,
அலங்கார பாவையாய் அவனது இச்சைப் படியே
வலம் வரும் போதிலே சுயம் தொலைந்து போனதே!”
“கண்டதே காட்சி, கொண்டதே கோலம்,
புறத்தோற்றம் ஒன்றே பிரதானம்-
இதுதானே இன்றிங்கு நடைமுறை?”
“ரசமாய் நான் ரசித்த விசயமெல்லாம்
விரசமாய் சீர் குலைந்து போனதய்யோ!”
“மெத்தவே புலம்புகின்றீர், ஏனென்று புரியவில்லை”
“ஒருமித்த கருத்துடனே, ஒருவருக்கொருவராய்
மனமொன்றி ஆணும், பெண்ணும் வாழும்
அகத்துப் பால் இலக்கணமே
அர்த்தமற்று போகலாயிற்றே!”
“தங்கள் வருத்தத்தை விளக்கமாய் விளம்பிடக் கூடாதோ?”
“ஆணுக்கும், பெண்ணுக்கும் பொதுவினில் வைத்தேன்
கற்பதனை, அழகாய் சுவைக்கச் சொன்னேன்
வாழ்வதனை- அந்தரங்கமாக.”
“தகவல் தொடர்பு யுகமய்யா,
அதன் தாக்கம் அதிகம்" இன்று ஒழிவில்லை, மறைவில்லை-
அதனால் ஒளியில்லை, சுவையில்லை.
அன்பால் அடக்கி, அன்பில் அடங்கும்
மணவாழ்வு இங்கில்லை- அந்தோ பரிதாபம்!
மணந்தவர் பிரிந்திட தயங்கவில்லை.
விவாகம் என்ற சொல்லே ஒழிந்திடப் போகுதோ?
சாரமில்லா வாழ்வில் சுகமுண்டோ, பொருளுண்டோ?
எதிர்பார்க்க ஏதுமின்றி, காத்திருக்க தேவையின்றி,
அதிசயமே ஏதுமின்றி, பகிர்ந்து வாழ பந்தமின்றி,
புளித்துப் போன வாழ்வினிலே புதுமை என்ன காண்பீரோ?”
“உண்மையை உரைத்தீரே, அலுப்பும், சலிப்பும் கண்டோமே,
அமைதி இழந்து தவித்தோமே- விந்தையென்ன விந்தையோ!
தூரத்தை வென்றோம், துயரத்தை அல்ல;
ஞாலத்தை வென்றோம், ஞானத்தை அல்ல;
வசதிகள் வளர பொருட்கள் குவித்தோம்,
இனிய உறவின் பொருளைத் தொலைத்தோம்;
பிரபஞ்சம் அடங்கியது கைப்பிடிக்குள்-
ஆனாலும் மிஞ்சும் வெறுமை எங்ஙனுமே.
மீள வழிதான் கூறுமய்யா.”
“நான் கண்ட புதுமைப் பெண்ணே, இப்பவும் சொல்கிறேன்,
புரட்சி நடத்துவாள், மடமை ஒழித்து
மிடுக்குடனே ஆக்க வேலை நடத்திடுவாள்,
தக்க துணை ஒருவனுடன் லயம் பிசகாது நடந்திடுவாள்;
தரமாய், அறமாய் நின்றிடுவாள்;
தாரமாய், தாயாய் மகுடம் தாங்கிடுவாள்.”

Tragedy of Errors

Characters:
1. Terra 2. Aqua 3. Breeze 4. Flora 5. Ozone 6. Manav

Manav: Hi friends! What a pleasure to see you five sisters together like this! But why are you all looking so sad? Is anything wrong?

Terra: My dear Manav, You first tell us if anything is right.

Manav: Dear Terra, you are bounteous good earth. Don't you see so much progress around you?

Aqua: Will you please tell me, Manav, about your so-called progress?

Manav: Dear Aqua, you are the water in rivers and seas making mankind flourish in this world. Can't you see the advances we have made in science and technology?

Breeze: Your advance, Manav, is indeed great. But are you sure it is all success and nothing else?

Manav: Dear Breeze, you are the wonderful air and atmosphere breathing life into us. Look, the wonderful, new millennium has begun!

Flora: Yes, the wonderful new millennium has begun and also our woeful destruction has begun.

Manav: What do you say, Flora? You are the green carpet of our mother Earth and why do you fear destruction? See the green signal leading into the 21st
century!

Ozone: You do fly fast, Manav. But stop one moment to look at the havoc you've made before raving about your glorious 21st century.

Manav: Dear Ozone, you are the roof above our earth protecting us with your purity. Do you also find something wrong in our hi-tech global village? Please tell me, all of you; what exactly is wrong with all the wonderful achievements we have made over these centuries.

Terra: There's no doubt about your intelligence, Homo Sapien. But some of your achievements are made at the cost of our health and wealth.

Aqua: You are reaching far but with shortsighted haste.

Breeze: You've thrown all caution to the winds in your pursuit of pleasure and advancement.


Flora: You're causing permanent damages for the sake temporary pleasures.

Ozone: You've forgotten to check the side effects of all your new inventions.

Manav: Oh! My God! What have I done to be accused like this by you? Will you please explain your charges?

Terra: Sure. We will be specific. You've made the earth a huge, gigantic dustbin. Just look at the heaps of garbage! Your blind pursuit of scientific advancement for pleasurable and convenient living has resulted in the accumulation of non-degradable junk like use 'n' throw cans, tumblers and containers.

Manav: Oh, you mean use of plastic is posing a problem to environment?

Terra: Yes. Can't you think about eco-friendly materials, which will not pollute the earth? The garbage mountains are not only eyesores but are also great health
hazards.

Manav: Yes, I think you are right.

Terra: Both urban and rural areas are filled with filth and litter. You must first cultivate civic sense to protect you environment.

Manav: Is that all?

Aqua: Dear Manav, you are proud of your industrial development. But do you take care about protecting the water sources? Toxic effluents from factories and
industries are let into rivers and seas making water unsafe for both man and animal. The aquatic creatures are dying in tons!

Manav: Is that true? I never knew it is all that harmful.


Breeze: Industrialization certainly has improved the standard of life. But look at all the accompanying evils! All the smoke emitted by factories and engines of all sorts of vehicles is polluting the air. Do you know a new word "smog" has been coined to denote air polluted by fog and smoke?

Manav: Is there any harm in this smoke?

Breeze: Is there any harm, you ask? It not only chokes the lungs and brings illnesses, it also produces the greenhouse effect, which in turn results in global
warming.

Manav: Global warming? What is it?

Breeze: Listen. The natural blanket of gases in the air is disturbed making the earth hot. When the earth heats up, glaciers and snow on mountaintops melt making the sea-level rise gradually. If the sea level rises, naturally, land area will be diminished.

Manav: My God! What far-reaching dangers are lurking in air-pollution!

Breeze: It is time you took precautionary measures.

Manav: What can I do?

Breeze: Filter the smoke coming out of the factories. Maintain your engines properly thereby preventing emission of excessive waste gases. Follow
emission-checking rules and go for unleaded petrol.

Manav: That sounds very sensible.


Flora: Do you know, Manav, what harm you are doing by destroying forests? Vast rainforests are continually being destroyed for firewood and for wood for building purposes. Green lands are also razed for building multi-storied concrete jungles. As a result natural rainfall decreases; draught and famine follow.

Manav: Really?

Flora: Forests, you know, are the habitats of so many wild animals, small and big. Where will they go if their homes are destroyed? They are perishing! Thanks to deforestation and merciless hunting many animal species are now extinct and many more on the border of extinction.

Manav: How sad!

Flora: Sadder is the fact that the food chain is broken which means serious calamity ultimately.

Ozone: Calamity waits to strike you from the sky above your head also. The harmful side effects of industrial revolution are seen in the depletion of ozone
surrounding earth. Elements like fluorochlorocarbon used in refrigerators and air-conditioners have made a hole in the ozone layer as has been found out in South
Antarctica.

Manav: This is news to me! How shall it affect me?

Ozone: Ozone layer has been protecting you from harmful ultraviolet rays in sunlight. If you get exposed to these rays you are liable to get cancer and many more ills. You better search for eco-friendly alternatives for harmful agents like fluorochlorocarbon.

Manav: Thank you Terra, Aqua, Breeze, Flora and Ozone for opening my eyes to all dangers my carelessness and blind haste have brought. I now realize how selfish and shortsighted I have been in improving my lifestyle through comforts of all sorts. Hereafter I promise not to neglect, not to pollute earth's natural environment. Thank you, once again, dear friends!

நிவாரணம்

இப்படியொரு இடி விழும் என்று இருவரும் எதிர்பார்க்கவேயில்லை. இரவு முழுக்க உறங்காமலே மன உளைச்சல்பட்டு பலிலும் தொடர்ந்தது நரகம். மீண்டும் மீண்டும் அதே வேதனைச் சுழலில் அமிழ்ந்து வெந்தனர்.

குலுங்கி குலுங்கி அழுதவளை தேற்ற வழி தெரியாமல் கலங்கிய கண்களுடன் விட்டத்தை வெறித்தார் அவர்.

எல்லாமே சூன்யமாய் தோன்றியது திசை தெரியாத காட்டில் சிக்கிக்கொண்டது போல் திகைப்பாய் இருந்தது. உலகம் ஸ்தம்பித்துவிட்டது போல இருந்தது. சித்தம் கலங்கிவிட்டது போல ஒரு உக்கிரமான உணர்வு தோன்றியது. கூண்டுக்குள்ளிருந்து தப்பிக்க சிறகை அடித்துப் போராடும் பறவையின் மரணாவஸ்தை. வயிற்றை பிசையும் வித்தியாசமான வேதனை.

"என்னங்க, நம்ம குழந்தை... நம்ம குழந்தை..." கண்ணீருக்கிடையில் பேச ஆரம்பித்தவளால் தொடர முடியவில்லை. மீண்டும் குலுங்கினாள்.

"ம்.. ம்... ம்..." அவள் தோளை ஆதரவாக தட்டியவராலும் வேறொன்றும் பேசமுடியவில்லை.

"முதல்லேர்ந்தே எனக்கு என்னவோ குறையா... என்னன்னே புரியாம.... முள்ளா உறுத்திச்சிங்க," ஒரு முடிவோடு சொல்லத் துவங்கினாள். "சாதாரண மாமியார் syndrome போலன்னு நினைச்சிட்டேங்க."

"ஏண்டி இன்னிக்கி நமக்கு வயசாகிட்டாலும் நம்ம வயசுகாலத்து ஞாபகமெல்லாம் மறந்தாபோகும்? கல்யாணமான புதுசுல நாம எப்படி இருந்தோம்?"

"ஆமாங்க, எனக்கும் ஒரே நெருடலா இருந்திச்சி, படிச்ச பசங்க, இந்தக்காலத்து நாகரிகம் போலன்னு நினைச்சேன். அந்தக்காலத்துலதான் வீட்டுல பெரியவங்க முன்னாடி கட்டுப்பாடு முக்கியமா இருந்திச்சி. நம்ம குழந்தைக சுதந்திரமா இருக்கும்படியாத்தானே நாம நடந்துக்கறோம்."

"மகன்கிட்ட இத எப்படிடி வாயத்திறந்து பேச முடியும்? குழந்த முகம் இருளோன்னு இருக்கிறத என்னால சகிச்சிக்க முடியாம உன்கிட்டயும் அனாவசியமா பீதியை கிளப்பாம ரகசியமா அழுதுகிட்டுருந்தேண்டி!"

"ரெண்டு பேரும் வேலைக்குப் போற அலுப்புன்னு நினைச்சேங்க. தாய் கண்ணுக்கு தப்பாத சீண்டல் ஒன்னுகூட இல்லேங்க! இப்படியுமா யந்திரமா இருக்கமுடியும்னு தோணுச்சுங்க."

"ஏதோ ஊடல், ஆரம்ப காலத்துல adjust பண்ணிக்கிற problem போலன்னு என்ன நானே சமாதானம் பண்ணிக்கப் பார்த்தேண்டி."

"தாயா தகப்பனா நம்ம உணர்வு எப்படிங்க தப்பா இருக்க முடியும்? புள்ள நடைபிணமா இருக்காப்புல தோணுனப்ப தலையிடாம எப்படிங்க இருக்க முடியும்?"

"நேத்து அவனுக்கு மட்டும் லீவுன்னு வீட்டுல இருந்தப்ப, கிடச்ச வாய்ப்ப நழுவவிடாம, நாசுக்கா ஆரம்பிச்சேன்."

"குழந்த பிடிகுடுக்கவே இல்லையே!"

"மாறி மாறி குடைஞ்சதுல இனி மறைச்சு பிரயோஜனமில்லேன்னு மனசு பாரத்த இறக்கி வச்சிட்டானேடி!"

"பள்ளியிலயும் காலேஜிலயும் எத்தனை மெடல்! எத்தனை பாராட்டு! எவ்வளவு பெரிய பதவி இந்த சின்ன வயசில! கடைசில சொந்த வாழ்க்கைல தோத்துட்டானே நம்ம தங்கம்!"

"நாம வளத்த குழந்த ஒழுக்கத்துலயும், மரியாதையிலயும் எப்பேர்ப்பட்ட ஜெம்! அவனுக்கு இப்படியொரு விதியா?"

" 'தொடாதே'ன்னு அந்த உத்தமனைப்போய் கிராதகி சொல்லுவாளோ?"

"பெண்டாட்டிய அன்னையா வணங்குற அவதார புருஷனையா மகனா பெத்துருக்கோம்?"

"காதல் கத்திரிக்காய்க்கு அவளோட தோப்பனார் மசியலேன்னதுக்கும், மிரட்டி நம்ம குழந்தைக்கு கட்டிவச்சதுக்கும் இப்படியா பழிவாங்குவா பாதகி?" அடி வயிற்றிலிருந்து சீறினாள்.

"இதெல்லாம் நமக்கு முன்னாடியே தெரியாம போச்சேடி! இன்னும் நல்லா விசாரிக்காம விட்டுட்டோமேடி!" தலையில் அடித்துக் கொண்டு அழுகையில் குலுங்கினார்.

"பழச மறக்காம எவனோ பழிகாரனோட போட்டோவ பர்ஸ்லேயே வச்சிகிட்டு அலையுற பாதகத்திக்கு புத்தி வரும்னு நம்ம குழந்த ஏங்க இலவு காக்கணும்?" பெத்த மனம் பொறுமியது.

"தோப்பனாரை மதிக்கல, புருஷனுக்கு அடங்கல, மாமன் மாமிய நினைக்கல, இவளுக்கு புத்தி சொல்றதும் கல்லுல நார் உரிக்கிறதும் ஒன்னுதான்!" ஆழமான வருத்தம் அவர் குரலில்.

"இவ்வளவு அழுத்தமா, அழிச்சாட்டியமா ஒரு பொண்குழந்த நடந்துக்க முடியும்னு என்னால நம்பவே முடியலீங்க! தாலிய கேலிக்கூத்தாக்கிட்டாளே!" ஆற்ற முடியாமல் அவள்.

"ஊரக்கூட்டி விமரிசையா கல்யாணம் பண்ணிவச்சதுக்கு பலன் இதுதானாடி?" சீறினார்.

"ஏங்க சந்தி சிரிக்கும்னு கூசத்தான் செய்யுது. அதுக்காக தப்பு செய்யாத நமக்கு, நம்ம குழந்தைக்கு நியாயம் கிடைக்க வேண்டாமா?" தீர்மானமாக கேட்டாள்.

"ஆமா. நானும் அதையேதான் நினைச்சேன். எது அசிங்கம், எது அகெளரவம், எது அநியாயம்னு ஒரு விவஸ்தையே இல்லாம கலி முத்திட்டிருக்கு. நம்ம குழந்தைக்கு நாம பூட்டின தளைய நாமதான் வெட்டிவிடணும்." முடிவு செய்துவிட்டார்.

"உள்ளுக்குள்ளேயே மருகி உருக்குலைஞ்சி போய்கிட்டிருக்கிற நம்ம குழந்தைக்கு இனியும் தாமதிக்காம நாம உதவி செய்யணுங்க." தாயுள்ளம் உருகியது

"நாம தெரியாம செஞ்ச பாவத்துக்கு பரிகாரம் இருக்கு. நம்ம அழகான, ஆனந்தமான குடும்பத்த ஆட்டி வைக்கிற இந்த விபத்துக்கு நிவாரணம் தேடுவோம்." தெளிவு பிறந்தது.

பாதியிலே

வெங்காயம் வெட்டி வைத்து
மிளகாயை கீறி வைத்து
தக்காளி அரிந்து வைத்து
இஞ்சி பூண்டு சேர்த்தரைத்து
சோம்பு கிராம்பு எடுத்து வைத்து
வாணலியை அடுப்பில் வைத்து
எண்ணெய் காய்கின்ற போது
வாசனைக்கு நாசி காத்திருக்க
நாவில் நீர் ஊற ஆரம்பிக்க
வயிறும் நிமிண்ட துவங்கும் போது
அப்படியே போட்டுவிட்டு
போய் படுக்கச் சொல்லியே
பாழும் தலைசுற்றல் வந்ததே
வாந்தி மயக்கம் வாட்டுதே.

பாலூட்டி தாலாட்டி சீராட்டி
பூப்போல விரிந்த மொட்டை
பள்ளிக்கு சீருடையில் அனுப்பி
பெரிய படிப்பு படிக்க பாசமுடன்
கல்விச்சாலை அனுப்பி வைத்து-
கலக்கம் வந்து சூழுதே
மனம் மருண்டு துவளுதே
பக்குவமாய் சமைக்கும் முன்னே
ஆயத்தமனைத்தும் வியர்த்தமாகுமோ
விளைந்து தெளிந்து வினையாற்றுமோ
விழலுக்கிரைத்த நீராய் போகுமோ
வெள்ளாமை வீடு வந்து சேருமோ
வறட்சி வந்து கருகுமோ
வெள்ளம் வந்து மூழ்குமோ

சுமை தாங்கும் தோள்களை
வலுவேற்றும் வேளையிலே
களமிறங்கி சாதித்து வென்றிடவே
பயிற்சி பெறும் பருவத்திலே
சிற்றின்ப சக்திகள், இச்சை பிசாசுகள்
ஏவலாய், பில்லி சூனியமாய்
வந்திங்கு இறங்குதே
இடியாய் தகர்க்குதே
கட்டி வைத்த கோட்டைகள்
காணாமல் போகுதே
என்ன இது சோதனை?
ஏன் இந்த வேதனை?
புலவு தயாராகுமா?
புதிய தலைமுறை பிழைக்குமா?

பங்கு

பாவிக்கின்றனரே பொது இடங்களை பொறுப்பின்றியே,
குப்பைகளை அதற்கான தொட்டிகளில் போடுவதில்லை,
எந்த இடத்திலும் எச்சில் துப்ப தயங்குவதில்லை,
திறந்த வெளியில் சிறுநீர் கழித்திட கூச்சமில்லை,
சிகரெட் புகையால் சக மனிதர்கள் திணறுவதில்
சிறிதும் அக்கறை காட்டுவதில்லை, நிறுத்துவதில்லை,
பொது இடத்திலே பாட்டின் ஒலியை குறைப்பதில்லை,
முதியோர், குழந்தைகள் யாரும் பொருட்டேயில்லை,
அடுத்தவர் மனநிலை அறிய முயலுதல் முக்கியமில்லை,
இதுவோ அழகு, இதுவோ நாகரிகம்?
நம் சூழலைக் காக்க ஒரே ஒரு நொடி
ஒவ்வொருவரும் தினமும் சிந்திக்க வேண்டும்-
அழகாய் வாழ்வதில் அனைவருக்கும் உண்டு பங்கு.

பண்பு

பழைய கதையிது
பள்ளியிலே படித்தது

ஊரெங்கும் திருவிழா
ஒளிவெள்ளம் பாய்ந்திட
உற்சாகம் தவழ்ந்திட
பக்கத்து வீடுகளின்
பட்டாடை சிறுமிகள்
இருவரும் இன்பமாக
வாசலில் சேற்றிலே
சிற்றோடை கட்டி
சேர்ந்து களிக்கையிலே
ஒருத்தி வீசியடித்த
சேற்று நீரதுமே
மற்றவள் பட்டாடையை
பாழாய் க்கியதே
“ஓ” என்றழுதனளே
அந்த ஓலம் கேட்டு
இருவிட்டாரும் ஓடி வந்து
நடந்த கதை அறிந்து
பெரும்போரை துவக்கி
கூச்சல் அதிகமானது
பகையங்கு பொங்கியது
கடுஞ்சொற்கள் ஓயாது
கணங்கள் மணிகள் ஆனது
சிறு இடைவெளியில்
சிறுமிகளை அவர் நோக்க
இணைந்து இருவருமே
மீண்டும் விளையாடுவதை
கண்ணுற்ற போதிலே
வெட்கம் வந்து இறங்கவே
விவேகம் அங்கு பிறந்தது

நரையில்லை நடுக்கமில்லை
பட்டறிவும் படிந்திருக்கவில்லை
படிப்பறிவும் ஏறியிருக்கவில்லை
முற்றாத குருத்துக்கள்
முகிழ்க்காத அரும்புகள்
குணத்திலே குன்றுகள்

அந்த நாள் கவிஞனும்
அழகாக பாடினான்
“குழந்தையும் தெய்வமும்
குணத்தால் ஒன்று
குற்றங்களை மறந்துவிடும்
மனத்தால் ஒன்று”

பிள்ளைகளாய் இருக்கும்போது
வெள்ளையாய் மனமிருக்க
தெய்வம் அங்கு குடியிருந்து
கள்ளம் வளரும் வயதோடு
விலகிச் செல்லும் கூறாது
பொது நியதியிது மாறாது

காக்காக்கடி கடித்து பகிர்ந்து
அழுத கண்ணீர் ஓடித் துடைத்து
ஆறுதலாய் வார்த்தை சொல்லி
தகப்பன்சாமி போலவே
ஞானத்தோடு வாக்கிருக்க
அழகான பண்பெல்லாம்
அணிகலனாய் அணிந்திருக்க
அது ஒரு நிலாக்காலம்

கைக்கூப்பி வணங்கிட
மனமுவந்து மதித்திட
அடியொற்றி நடந்திட
வளர்ந்த வருடங்களா
சுமந்த பட்டங்களா
மணக்கும் இனிக்கும்
மனிதநேய பண்புகளா
ஐயமிதிலில்லை
தெளிவானது தீர்ப்பு

பத்திரமாய்

தென்றலாய் நடந்து வந்தாய்
மனதில் வீசியது புயல்
குளிர்ந்த பார்வை வீசினாய்
உள்ளே வெடித்தது எரிமலை
அன்பாய் அழகாய் பேசினாய்
அண்டம் மீண்டும் சிதறியது
அவசரமாய் ஏனடி ஓடினாய்?
ஆவியைத் தொட்ட பாவையே!
இன்னும் என்னுள் இனிக்கிறதே
இருவாச்சி போல் மணக்கிறதே
தரையில் கால் பாவ மறுக்கிறதே
விண்ணில் மனம் பறக்கிறதே
இந்தக் கணத்தை, என்னுணர்வை
பத்திரமாய் பொத்திக் காத்திட
பரவசமாய் பிரித்துப் பார்த்திட
பதித்து வைக்கிறேன் இவ்வரிகளிலே.

பயணத்திலே

தாகத்தோடு தேடினேன் தண்ணீர் கிடைத்தது
வேகத்தோடு ஓடினேன் வெற்றி கிடைத்தது
மேகத்தோடு மோதினேன் கொடுக்கப் பழகினேன்
போகத்தோடு போரிட்டேன் புத்துயிர் பெற்றேன்
யோகத்தோடு பிறந்தேன் புத்தியோடு வாழ்கிறேன்
ராகத்தோடு பாடினேன் வானம் வசமானதென்று

பெண் பிறந்தாள்

தென்றலைப் போலவே பெண் பிறந்தாள்,
தெவிட்டா இன்பம் தந்திடுவாள்;
அலையாய் அழகாய் அசைந்து வந்தாள்,
அடுக்காய் மேன்மைகள் கொண்டு வந்தாள்.

கரையாய் துயரை தடுத்துக் கொண்டாள்,
அணையாய் காவல் காத்து நின்றாள்;
பொறுமைக்கோர் எல்லை வைத்திடுவாள்,
புயலாய் அவளே பொங்கிடுவாள்.

சூரியக்கனலாய் எரிக்க வந்தாள்,
தீதினை அழித்து ஒளியும் தந்தாள்;
நிலவின் குளுமை தவழ வந்தாள்,
வாழ்வில் வெறுமை மறையச் செய்தாள்.

மலையைப் போலவே உயர்ந்து நின்றாள்,
மன உறுதியின் மாண்பை காட்டுகின்றாள்;
நதியைப் போல இறங்கி வந்தாள்,
நன்மை செய்ய விரைந்து வந்தாள்.

தாயாய் உலகை தாங்கி நின்றாள்,
சேயாய் உவகை பெருகச் செய்தாள்;
கனிவாய் உறவுகள் அணைத்திடுவாள்,
கவிதைத் தேனாய் இனித்திடுவாள்.

பெண்மை

ஆணென்றும் பெண்ணென்றும் ஆண்டவன் படைப்பிலே
சாதி இரண்டிருந்தாலும், சார்ந்த இந்த இரு இனத்திலே
சிறப்பென்று சீர்தூக்கி பார்க்கையிலே
வலிய கொம்பாய் வளர்ந்திருக்கும் ஆண்மை
மெலிய கொடியாய் படர்ந்திருக்கும் பெண்மை
பின்னதன் பெருமை பெரிதென்பதுண்மை-

மலர்ந்து மணந்து முழு நிலவாய் ஒளிர்கையிலே
இல்லறமாம் நல்லறத்தை இனிதே நடத்திச் செல்கையிலே
ஆனந்த உணர்வொன்றே ஆணின் எல்லை,
ஆரம்பமாவது பெண்ணின் முடிவில்லா தொல்லை-
மசக்கை என்பதோ ரொம்பக் கொடுமை,
கருவைத் தாங்கி வளர்க்க வேணும் பொறுமை,
கண்ணுள் வைத்து பேணிக்காக்கும் தாய்மை,
இத்தனையும் பெண்ணின் தனிப் பெருமை.

அறிந்தே அளித்தான் ஆதி பகவன் பெண்ணிடம்
ஆக்கிப் படைத்து காக்கும் பொறுப்பினை.
மானிடம் தழைக்க மங்கையர் பெற்ற பேறிது,
மானிலம் முழுக்க இதுபோல் வேறு பேறெது?
பெறுதற்கரிய வரமிதை காத்திடுவோம்,
பெண்மை வெல்க என்று கூத்திடுவோம்.

பெண்ணே

சூட்டி மகிழ்ந்திடு பெண்ணே மணம் நிறைந்த மல்லிகையை,
காட்டி சிரித்திடு கண்ணே கையில் மருதாணி சிகப்பழகை,
போட்டி ஏதடி அன்னமே புடவையின் பேரெழிலுக்கு,
எட்டி செல்லடி செல்லமே கயவர் கூடும் இடமிருந்து,
வெட்டி வீழ்த்திடு கொழுந்தே வேண்டாத இச்சைகளை,
தட்டிக் கேளடி தளிரே தவறுகின்ற தலைமுறையை,
கட்டிக் காத்திடு கனியே கண்ணியமெனும் கவசத்தை,
பூட்டி வைக்க முடியாது பூவையே புலருகின்ற பகலினை,
கெட்டிக்கார பாவையே கெடாமல் நீயிருக்கும் போதிலே
கொட்டிக் கிடக்குது கொடியே கோடி இன்பம் பாரிலே.

பிறவி நாடகம்

இனங்கள் இங்கு பலவுண்டு
ஏமாளி கோமாளியென
நாடகமேடையிதுவென்பர்
ஏற்ற வேடத்திற்கொப்ப
குரைத்தோ கூவியோ
நடித்து முடிக்க வேண்டுமே
காத்திருந்து கலைப்போம்
நாம் பூசிய அரிதாரத்தை.

போர்

நீயும் நானும் நிழலும் நிசமுமாய்
நகமும் சதையுமாய் ஊனும் உயிருமாய்
பூரியும் கிழங்குமாய் புரோட்டாவும் குருமாவுமாய்
பூட்டும் சாவியுமாய் கணிணியும் கீபோர்டுமாய்
இன்னும் இதுபோல் பலவுமாய் இருக்கையிலே
இந்த நிழல் யுத்தம் ஏதுக்கடி என்னவளே?
வெற்றியின் களிப்பும் தோல்வியின் களைப்பும்
உனக்கும் எனக்கும் வெவ்வேறாய் இருக்குமோ?
இரு கண்கள் காணும் ஒரு காட்சியாய்
இரு தண்டவாளம் தாங்கும் ஒரு வண்டியாய்
நம் வாழ்க்கை இருப்பது காண்கிலையோ?
இந்த வீம்பும் வீராப்பும் வீணில்லையோ?
வாடிய பயிர் எனை கண்டு வாடாத வள்ளலாரோ?
கல் மனதில் ஈரம் கசிவதில்லையோ?
என் தாபம் தணிய வழியில்லையோ?
பொய்க் கோபம் முடிந்து போகாதோ?

பொருளென்ன பொருளே

பொருள் நாடி புலம் பெயர்ந்தவர்கள்
பொருள் தேடி புலன் வென்றவர்கள்
பொருள் அடக்கிய புத்தகம் போன்றவர்கள்
பொருள் புரிவதற்கு புத்தியை தீட்டியவர்கள்
பொருள் வழங்கி புண்ணியம் ஈட்டியவர்கள்
பொருள் விளங்காத புதிராய் போனவர்கள்
பொருள் ஒன்றே குறியாய் ஆனவர்கள்
பொருள் புரிந்து வாழ்ந்து சென்றவர்கள்
பொருள் அடக்கம் ஆவார்கள் இவர்கள்
பொருள் பொதிந்த உலகசரித மறையிலே

பொழுது சாயும் வேளை

வசந்தம் வந்து போனது-
சுவடுகள் விட்டுச் சென்றது.
சருகுகள் பறக்கும் காலம்,
சல சல ஓசையும் கானம்.

பொத்தி வைத்த பூமணம்
புகையாய் மாறுது நினைவினில்.
கனவாய் தோணுது மனதினில்
கருத்தில் பதிந்த காட்சிகள்.

கடந்து வந்த காடுகள்,
கலங்கி நின்ற தருணஙள்,
கனமாய் சுமந்த பாரங்கள்
கரையுது அந்த கணங்கள்.

மூழ்கி எடுத்த முத்துக்கள்,
முயன்று பெற்ற பேறுகள்-
முதுமை கால நாட்கள்
புரட்டிப் பார்க்கும் ஏடுகள்.

புதிதாய் புலரும் காலைகள்,
பொறுத்து முடியும் மாலைகள்-
பொதிந்து கிடந்த ரகசியம்
புரிந்து போனது அதிசயம்.

சலனம் இல்லாத ஒய்வு,
பொழுது சாயும் வேளை-
இதமாய் ஒரு வலி இதயத்தில்;
இதுவே இனிதான பொது விதி

புதிர்

விட்டது எதை பற்றியது எதை
விளங்கவில்லை இன்று வரை
கேட்டது எதை கேளாதது எதை
கணக்கிட்டு பார்க்கவில்லை
பட்டது எதை படாதது எதை
புலப்படவில்லை புத்தியில்
இட்டது எதை இடாதது எதை
இடது கைக்கு தெரியவில்லை
போட்டது எதை போடாதது எதை
பிரமன் எழுத்து புரியவில்லை
புரியாத புதிராய் வாழ்வென்பது
மொத்தத்தில் மெத்த நன்றானது.

Tuesday, March 16, 2010

சலனங்கள்

கால நதிக்கரையிலே
வைகறைப் பொழுதிலே
குரங்கென்ற குறியீடின்றி
கூன் நிமிர்ந்து நடக்கையில்
அறியாமை இருளுமே
மெல்ல விலகியதே
பொல பொலவென விடிந்தது
பூகோளம் பௌதீகம் புரிந்தது
நீர் நெருப்பின் பயன் தெரிந்தது
வாழ்வின் சுவை கூடிப் போனது
ரசமான நாடகமாய் ஆனது
எம்பி மனிதன் குதித்த போது
வானம் தலையில் இடித்தது
நிலவைத் தாண்டி பயணமாகுது
இசைவான இயல்பொழித்து
இயற்கை ஏனோ சீறுது
தாயாய் தாங்கிட மறுக்குது
பேயாய் மாறி டுது
பெய்தும் கொல்லுது
பெய்யாமலும் கொல்லுது
பூவை பிஞ்சை தீ நாக்கு விழுங்குது
புரியாத புதிர்களோ
பழைய பழி கணக்குகளோ
புத்திக்கு எச்சரிக்கையோ
போதைக்கோர் மாற்றோ
புது உலகம் சமைக்கவோ
கால நதிக் கரையிலே
அலையின் சலனங்கள்
அதிலுண்டோ அர்த்தங்கள்
ஆடுகின்ற ஓடங்கள்
தேடுகின்ற பாடங்கள்
தீராத தாகங்கள்
ஓயாத மோகங்கள்
நில்லாத போகங்கள்
சொல்லாத சோகங்கள்
வெல்லாத இலக்குகள்
ஏனிந்த சம்பவங்கள்
விடை எங்கே
விடுதலை எங்கே

சமர்த்து

முடியாதோ முயன்றால் முடியாதோ
இமயத்தை இடுப்பில் சுமக்க
பரசுராமன் வில்லை வளைக்க
கண்ணசைவில் கணவனை அழைக்க
மாதக்கடைசி வரை ஒப்பேற்ற
வீட்டளவில் சுத்தம் காப்பாற்ற
மனதளவில் இளமை காக்க
இடுக்கண் வருங்கால் நகைக்க
ஓடும் கற்பனைக்கு கடிவாளமிட
முடியும் எல்லாம் உன் சமர்த்து.

சேதி

தேன்மலர்கள் காற்றில் ஆடி
அழைத்த வண்டுகள் பாடி
பூப்பூவாய் திகையாமல் ஓடி
பதமான அமுதைத் தேடி
மதுவின் போதையும் கூடி
நகரும் கால்கள் தள்ளாடி
ஒட்டிய மகரந்தப்பொடி
பூவெங்கும் உதிர்த்தபடி
சிலிர்க்குது செடிகொடி
சிறப்பானது அந்த நொடி
பிறக்குது அடுத்த அடி
பிழைக்குது தாவர நாடி
தொடர்கின்ற வாழையடி
இது நுட்பமான சேதியடி

சொற்கள்

சொற்கள்! சொற்கள்! சொற்கள்!
சொக்க வைக்கும் சொற்கள்!
குயவன் கை களிமண்ணாய்
குழைந்து வளையும் சொற்கள்!
உளியின் கல்வெட்டாய் பதியும்,
உருக்கிய பாகாய் கசியும்,
காலை ஒளியாய் வளரும்,
மாலை நிழலாய் நீழும்,
மோனத்தில் மனமிருக்கையில்
உற்சாக ஊற்றாய் சொற்கள்!
ஊறிய விதையென வெடிக்கும்
சூல்கொண்ட சொற்கள்!
கனவை வடிக்கும் சொற்கள்!
கட்டுக்கடங்கா சொற்கள்!
எண்ணத்தை எழுத்தில் வரைய
கை கொடுக்கும் சொற்கள்!
எண்ணற்ற வித்தைகள்,
என்னென்ன விந்தைகள்,
மயக்க வந்த மாயங்கள்,
வண்ண வண்ண சாயங்கள்,
வானவில்லின் சாயல்கள்,
மெல்லிய மயில் சிறகுகள்,
வலிய எ·கான வாட்கள்,
இடையில் ஒளிந்த ஊகங்கள்,
உயிரை தீண்டும் தீ நாக்குகள்,
மெய்யை நிறுவும் வாக்குகள்,
உயிரை மெய்யுடன் சேர்க்கும்
அறிவுப்பாலம் அவையன்றோ!
அ·தின்றி மொழியுண்டோ?
மொழியில் செழிப்புண்டோ?
செழிப்பில் செருக்குண்டோ?
செருக்கின் அணி பூண்டவர்
பூத்து காய்த்து கனிந்து
சீருடன் நடை போடலும்,
வகை தொகையுடன் வளர்தலும்
மரபாய் வளர்ந்த காலையில்
புதுமையும் புலர்ந்ததே,
மணம் வீசி மலர்ந்ததே-
சொற்கள் தந்த கிறக்கம் வளர்க!
கிறங்கி வளர்ந்த கிறுக்கும் வாழ்க!
ஞானக்கிறுக்கில் ஞாலம் தழைக்க!

சூரியக்கனல்

ஆடவனே! ஆதவன் என்றுன்னை
எண்ணி இறுமாந்தவனே!
நீ உமிழும் ஒளியிலே
வெறும் கண்ணாடி பிம்பமாய்,
சோகை நிலவாய், பிறையாய்
தேய்ந்து தேய்ந்து வளரும்
பேதை என்றே பெண்ணை
எண்ணி மெய் மறந்தவனே!
ஒரு பிரமையிலே மிதப்பவனே!
எரிக்கும் கனலாய் தணலாய்
நிற்கும் சக்தி பெண்ணடா!
பிறப்பின் இருப்பிடம் அவளடா!
சிறப்பின் பிறப்பிடம் அவளடா!
அவளின் இரவல் நிழலாய்
இளைத்து சுற்றிச் சுற்றி
நிலவாய் திரிபவன் நீயடா!
பொய்க்கனவை உதறிடு!
உறங்காதே எழுந்திரு!
சூரியக்கனலை போற்றிடு!

சூத்திரம்

வேண்டும் என்ற வேட்கை இருந்தால்
பாலுக்குள் ஒளிந்திருக்கும் நெய்யை
பத்திரமாய் வெளிக்கொணரலாம்
பாலை பதமாய் காய்ச்சி ஆற விட்டு
ஏடெடுத்து உரை விட்டு புளித்த பின்னே
மத்தெடுத்து கடைகையில் திரளுமே
மெத்தென்ற நல்ல வெண்ணெய்யுமே
பாத்திரத்தில் அதையெடுத்து
பக்குவமாய் அடுப்பில் உருக்கிடவே
பொன்னிறத்தில் கமகமவென நெய்-
இல்லறத்தின் நெய் மணக்க
இணக்கமும் இன்பமும் கைகூட
கொஞ்சம் கவனமாய் மெனக்கெட
பழகிவிட்டால் கவலையில்லை.

தாகம்

சொம்புக்குள் கடல் சுருங்குமா?
கணத்துக்குள் யுகங்கள் அடங்குமா?
பிறவியின் போக்கு பிடிபடக்கூடுமா?
அலையும் ஆவி அமைதியைத் தேடுமா?
வாழ்வின் மெய்ப்பொருள் கண்டவருண்டா?
அது மணக்கின்ற மல்லிகை செண்டா?
செங்கன்னல் சாற்றின் கல்கண்டா?
சேற்றில் சிக்கிய தாமரை தண்டா?
பூங்கூட்ட தேனறிந்த சிறு வண்டா?
பக்கவாட்டில் நடக்கின்ற நண்டா?
தர்க்கமும் தத்துவமும் இனி வேண்டா-
தாகம் தீரும் தருணம் தானே வந்திடாதோ?

தாம்பத்யம்

மெய்யெது பொய்யெது புரியாத மோன நிலையிலே
இணைந்து பிணைந்து கிடந்தன இருபது விரல்கள்
இமைக்க மறந்து கவ்விக்கிடந்தன நான்கு விழிகள்
என்னென்னவோ கதைகள் பேசிட ஊமை மொழிகள்
ஒரே தடத்தில் இரு மனங்களின் மௌனப் பயணம்
“நீயே என் ஒரே தாரம்” என்கின்றான் அவன்
“நீங்கள்தான் என் ஒரே ஆதரவு” அவள் பதில்
நிறைய கற்பனைகள் நடுவே நீண்ட பெருமூச்சுகள்
சொல்லத் தெரியாத புதிரான எதிர்பார்ப்புகள்
இன்பமா துன்பமா இனங்காண முடியாத திகைப்பு
கலையாத தவமா கலைக்க விரும்பாத கனவா
மிச்சமின்றி துய்த்துவிட்ட பெருங்களைப்பா-
“நடு நிசி ஆகிவிட்டது தூங்கப்போகலாம்
பல்செட்டை கழற்றிவிட்டுப் படுக்க வாருங்கள்”

தாரகை

திருத்தமான வட்ட முகமொன்றை
வானத்திரையில் வரைந்து விட்டு
வெள்ளை வண்ணம் குழைத்துப் பூசி
ரசித்த ஓவியனும் திருட்டி கழிந்திட
ஒத்தையாய் கருப்பில் ஒரு பொட்டு
வைத்திட மறந்ததால் பதறினான்
பிடித்திட்ட தூரிகையை உதறினான்
ஆகா! வானில் எத்தனை தாரகை!

தாய்

"தாய்" என்ற ஒரு வார்த்தை சிறு வார்த்தைதான்,
ஆசை மிகுதியில், பொய்யான அலுப்பில்
கணவன் அழைப்பான் மனைவியை "தாயே!"
பாசம் வழிய பிரிய மகளை அழைக்கும்
தந்தைக்கு கிடைத்த வார்த்தையும் "தாயே!"
வளங்கள் பொங்கும் இயற்கையும் தாயே,
போற்றுகின்ற பிறந்த பொன்னாடும் தாயே,
கருணைக்கடலாம் இறைவனும் ஈங்கு தாயே,
இராப்பிச்சையின் அழைப்பிலும் தாயே,
அரசியல் தொண்டர் நாவிலும் தாயே,
எங்கும் நிறைந்தவளே, அன்னையே,
சக்தியே, ஆதரிப்பாயே!

தாயே

கதி இதுதான் என்றுன்னை இனி கட்டிப் போடுவாரில்லை
தொட்டிலை ஆட்டி தொல்லுலகை ஆண்ட கைக்காரியே
வண்ண வளையல் குலுங்கும் வனப்பான கைக்காரியே
வக்கணையாய் சமைத்து வசியம் செய்யும் கை(க்)காரியே
நளின விரல்கள் கணிணியில் நடனமாடும் கை(க்)காரியே
இருட்டறையில் இருந்து வெளிப்பட்டதில் கண் கூசியதோ
புதிய சுதந்திரக் காற்று சூறாவளியாகி மூச்சு முட்டுதோ
காய்ந்த சருகாய் இலக்கின்றி சுழட்டி அடிக்குதோ
தளை கழன்ற கால்கள் கல் முள் பாராமல் ஓடுமோ
அர்த்தமுள்ள வேலிகளை உடைத்து உடைந்து போவாயோ
பொருந்தாத வேடமணிந்து பொலிவிழந்து போவாயோ
பொல்லாத ஆண்வர்க்கமென பொய்யாக பாய்வாயோ
போட்டியிலே மெய்யறியாமல் மெய்யை இழப்பாயோ
உலகை தொட்டிலில் ஆட்டும் தாயென்றும் நீயேதானே
தடுமாறி தடம் புரண்டு தகைமையிழந்து தவிக்கலாமோ
ஆற்றங்கரை நாணலின் வேரென உறுதியுடன் நின்றிடு

தெரிந்துகொள்

தெரியவில்லை எது எனக்கு தெரியுமென்று;
இதை அது என்றும், அதை இது என்றும்
தவறாக எண்ணியிருந்தேன் - இல்லை,
எது என்ன என்று எண்ணாமலிருந்தேன்,
கிழக்கே உதித்து, மேற்கே சாயுது
என்று நினைத்த சூரியன் பாவம்
ஓரிடத்தில் நிற்க நாந்தானே சுற்றுகிறேன்!
மாயாமயக்கமிது-மக்காய் மக்களை ஆக்குது,
மதியை வளர்த்து, மயக்கம் தீர
மனம் என்று விரும்புமோ?
ஏன், எதற்கு, எப்படி என்று சாக்ரடீஸ் போல
அறிவை தீட்ட வேண்டாமோ?
பிரபஞ்ச எல்லை வரை
சிந்தனை நீண்டிட வேண்டாமோ?

தேவையென்ன?

மலருக்கு மலர் தாவும் வண்டு
பலவித தேன் உண்டு கொண்டு
அதிலே நல்ல பொருள் உண்டு
பூவுக்கு செய்யும் ஒரு தொண்டு
அதுதான் மகரந்த வினியோகம்
மலர்கள் பெருகும் உபயோகம்.

மலர் தாவும் வண்டைப் போல்
மனிதர் செய்ய தேவையென்ன?
ஆணோ பெண்ணோ மலரில்லை
சுவைத்து விட்டு வேறிடம் செல்ல
நல்லறத்தில் ஒருவனுக்கு ஒருத்தி
நிலைத்திருப்பதே திடமான புத்தி.

திரை விலகியது

அது ஒரு ரகசியம்
அனைவரும் அறிந்த விசயம்
ரகசியமாய் வைத்திருக்க
ரகசிய ஒப்பந்தம் ஒன்றுண்டு
புரியாத சேதியில்லை
பூடகமாய் ஊமை மொழியில்
கண்களின் சந்திப்பில்
கைகளின் கோர்த்தலில்
பரிமாறும் பழைய செய்தி
வேறொன்றை நினைப்பதில்லை
கூடிக்கூடி கூட்டமாய்
கிசுகிசுப்பாய் பேசவும்
தலையை மட்டும் ஆட்டவும்
கதகதப்பாய் உணரவும்
எதிர்பார்த்து ஏங்கவும்
கனவு கண்டு தூங்கவும்
முன்னாளின் சக்கரத்தை
அசைபோட்டு மகிழவும்
மூச்சடக்கி காத்திருந்து
பல நாளாய் பொறுத்திருந்து
பக்கம் வரும் பருவத்தை
அரவணைக்க ஆவலாய்
அத்தனை பேரும் பார்த்திருக்க
மந்திரக்கோல் பட்டது போல்
மன்னன் ஆணை கேட்டது போல்
மீட்டிவிட்ட வீணை போல்
எய்துவிட்ட அம்பை போல்
வெள்ளைத் திரை விலகியதே
புல்லும் வெடித்து முளைத்ததே
குப்பென்று பூக்கள் மலர்ந்திட
பட்ட மரம் துளிர்த்திட
சலசலக்கும் ஆறுகளும்
சங்கீதக் குயில்களும்
நிறுத்தி வைத்த இயக்கத்தை
ஆழ்ந்து கிடந்த உறக்கத்தை
நொடியில் உதறி எழுந்திட
பூலோகம் புதுக் கோலம் பூண்டதே
பாரெங்கும் புதுக்கவிதை கேட்டதே
வருடந்தோறும் இப்பருவ நாடகம்
தருகின்ற தனியான ஒரு சுகம்
செவிக்கு எட்டாத சங்கீதம்
கேட்டு சிலிர்க்குது உயிரினம்
தாளம் போடுது உள்மனம்
பொத்திவைக்க முடியாமல்
பூத்து மணக்கும் பருவமிது
கட்டிப் போட முடியாமல்
சதிராடும் வசந்த காலமிது
கொட்டி வைக்க இடமின்றி
பொங்கின்ற பேரெழில்
வழிந்தோடும் வழியெல்லாம்
விழி விரிய விருந்துண்போம்
கலி தீர்ந்து போனதென்று
களிப்போடு நகைத்திருப்போம்
கைகொட்டி மழலை போல்
சத்தமாக மகிழ்ந்திடுவோம்
பேருவகை பிறக்கிறது
புதிதாய் இன்று பூமி பூத்ததிலே
IndiBlogger - The Indian Blogger Community