Thursday, December 23, 2010

வரவேற்றிடு

IndiBlogger - The Indian Blogger Community
அல்ல அல்ல இது இருளல்ல
ஒளியின் நிழல் கூடவே வரும்

அல்ல அல்ல இது இரவல்ல
பகலின் ஆயத்தம் பொறுத்திரு

அல்ல அல்ல இது வலியல்ல
உடலின் உயிர்ப்பு ஓர் எச்சரிக்கை

அல்ல அல்ல இது முடிவல்ல
துவக்கத்தின் அறிகுறி அறியாயோ

வருடம் முடியுது புதியது பிறக்குது
வருக வருகவென வரவேற்றிடு

Wednesday, December 22, 2010

கோட்பாடுகள்

IndiBlogger - The Indian Blogger Community
சிதைந்திடுவர் சுனாமியில் சிக்கிய கடற்கரையாய்
செம்மையாய் தன் வாழ்வை செதுக்க மறந்தவர்
சீராய் கோட்பாடுகள் தினமும் கடைபிடிக்காதவர்
சிற்றின்ப கடலில் திளைத்து தரம் தாழ்ந்தவர்

Sunday, December 19, 2010

Is it a Curse Being a Woman?

IndiBlogger - The Indian Blogger Community
Being a female is not a curse. No, never. Our vernacular poet in Tamil sings it is a great blessing to be born a female.

The first thing to be understood is that male and female are two different categories completely different in biology, hormonal behaviour, emotional reaction, mental reasoning and psychology. They are two complementary parts. Together they a beautiful, meaningful whole. There are many aspects in both which are equally precious and admirable.

By nature the female is weaker than the male, in muscle, strength and stamina. Being designed physically to bear children and nurture them a correct assessment of her role and importance in society is necessary.

Down the ages of human history there have been periods of matriarchal supremacy in governance. Then chauvnistic males took over and are maintaining their supremacy. Crude methods of slavery, denying education, enlightenment and freedom have been used by them for many many centuries. The mindset of males is caught in a groove. In course of time the renaissance of the industrialised world has emancipated the unenlightened woman from her prison of darkness.

Legally, practically it has become an established fact that women have equal rights. But in execution it is not found easy to establish. Many males grudge to give the female her right acknowledgement. A false ego complex prevents smooth running of matters inside and outside the home.

If the male is at fault in many a situation I cannot hide the fact that the woman overshoots in misguided ambition. There are clearly two sets of womanly and unwomanly aspirations, accomplishments and achievements! She is well advised to tread only the paths suitable for her inherent equipment. The roles are different but not superior or inferior.
When this fact is understood there can be no confusion about whether it is a curse or blessing to be a female. The wicked practices against women are to be eradicated and women obtain their place of honour as copilots in the journey of human life.

Wednesday, December 15, 2010

The silver strand

IndiBlogger - The Indian Blogger Community
An introspection into my pet hates and loves shows me clearly my likes and dislikes have not changed much over the years. In fact they seem to have become stronger and more defined!
There is, of course, a childishness in the peculiarity of my preferences. Most of them are unreasonable and inexplicable!
It is almost an adamant objection to accepting established facts! Strangely though, there is no sense of shame or guilt in admitting them publicly.
Now let me come to the matter I am contemplating on right now: it is my aversion to greying of the hair. To tell the truth my jet black hair started turning grey much later than for my contemporaries and younger women.
My sisters and sisters-in-law openly showed their surprise a decade ago at having to search for grey hair on my head when theirs made no secret of the pepper tone spreading fast and wide. The undertone of envy was unmistakable!
Very conscientiously I have been including curry leaves in my daily diet for the past four decades or so. I strongly believe in its power to keep my hair black besides its other nutritive values. I grind a generous dose of it in my coconut chutney, the favourite side dish for the idli/dosai in our daily breakfast.
With all such thoughtful care I have crossed sixty with my mop still mostly black. But the gradually increasing appearance of silver strands on the edges of ears and forehead is a matter of grave concern to me in spite of realizing there is no stopping it!
Most of the ladies I know simply resort to dyeing. The market is flooded with so many brands. The media woos them at every turn! But I have some scruples about the procedure in spite of my undeniable vanity. No chemicals on my head (‘herbal’ is a word used to mislead into traps!) is my strong decision. No wavering of the mind in this taking-no-risk policy. Besides, in my eyes these ladies with blackened tops wanting to look like young lasses are pathetically comic figures because of the telling signs of age on their face and skin.
Ageing is not my worry. No. It is even doubtful if the fact of my getting old has got registered in my mind! I do love to bask in the respect my years earn for me.
It is just a childish peeve at seeing my black hair changing colour. As I was staring at the few silver strands in my comb today after grooming my hair the precious metal’s glitter sparked a spot in my feminine vanity to regard it as a valuable acquisition! A soothing thought to settle my perturbed psyche!

Thursday, December 9, 2010

கொள்ளையர்

IndiBlogger - The Indian Blogger Community
மந்திரிகளை அரசவையில் மட்டுமா காணலாம்
சீட்டுக்கட்டில் இருப்பர் நால்வர் கருப்பாய் சிகப்பாய்
இல்லத்தரசியாய் இருப்பர் குட்டையாய் நெட்டையாய்
பார்லிமென்ட்டிலும் இருப்பர் கொள்ளையர் இனமாய்

Wednesday, December 8, 2010

மாயமென்ன மாயமோ

IndiBlogger - The Indian Blogger Community
துயருறுவர் சிறு வயதில் சிறு தடங்கலுக்கும்
தொடராய் வரும் சவால்களும் சறுக்கல்களும்
தாமரை இலை தண்ணீராய் தள்ளாத வயதினில்
தன்மையை மாற்றிடும் மாயமென்ன மாயமோ

Thursday, December 2, 2010

இறந்தாரே

IndiBlogger - The Indian Blogger Community
இறந்தாரே இருந்தும் இல்லாதாரே
இயற்கையை ரசிக்க தெரியாதார்.

Saturday, November 27, 2010

After sixty!

IndiBlogger - The Indian Blogger Community
Let me share my musings on my turning 62 today. I feel at sixty time circle closes and I began travelling back! Yes. This is my second childhood! I can find it true in many revelations: a carefree state of mind, no unnecessary worrying over this and that, increased desire to spend time in playing games(thrilled to find such a vast scope online- my grandchildren initiated me into them!), love for innocent pleasures like sweets, icecreams, snacks etc, pleasure in watching birds and flowers and pure naivety. Grudges are forgotten soon and daily life is becoming filled with very simple joys like enjoying a sudoku or crossword puzzle, watching children playing round, listening to the gentle patter of raindrops and satisfactory outcome of cooking each dish! In spite of childish bouts of ill temper and impulsive behaviour there certainly is a childlike glee in flying hither and thither like a little bird. No specific goals to achieve, no unfilled mission to lose sleep on- in short the yoke of life feels lighter. Is this state of aloofness the 'vanaprastham' spoken of by sages? Whatever it is let life roll on at this same pace and come to a peaceful end!

Wednesday, November 24, 2010

விடுதலை

IndiBlogger - The Indian Blogger Community
வைக்கும் இடத்தில் வைக்கும்
வகையும் வழியும் மறக்கலாமோ
விழ மறுக்கும் காய்ந்த சருகினை
வைத்தனர் முதுமக்கள் தாழிக்குள்
வேண்டும் அந்த விவேகம் நமக்கும்
வருமா அந்த விடுதலை மீண்டும்

Tuesday, November 23, 2010

பால் குக்கர்

IndiBlogger - The Indian Blogger Community
பொங்கிடுதே பாலும் கவனம் சிதறினால்
தீய்ந்த வாடை அபாய மணியாய் அழைக்க
அணைந்த அடுப்பும் வீணாய் போன பாலும்
சவாலாய் வெருட்ட பாலை மறுபடி காய்ச்சி
அடுப்பைக் கழுவி துடைத்து இடுப்பொடியுமே
விசிலடிக்கும் பால் குக்கர் நல்ல மாற்றாகுமே

Sunday, November 21, 2010

நிலவரம்

IndiBlogger - The Indian Blogger Community
மின்னஞ்சலை கற்பனை கூட பண்ணவில்லை
காசிக்கு தொலைபேசி தொடர்பையே அதிசயமாய்
களிப்புடன் யோசித்தான் முண்டாசுக் கவிஞன்
தீர்க்கதரிசியென்கின்றோம் அதில் உண்மையுளதோ

ஐயோ பாவம் அப்பாவி பாரதி அவனுந்தான்
மனதில் எதை நினைத்தானோ ஏன் சொன்னானோ
அச்சமும் நாணமும் பெண்டிர்க்கு வேண்டாமென்று
பிள்ளையார் பிடிக்க குரங்காய் போனதே

முட்டிக்கு மேலே குட்டை பாவாடை
தோள்பட்டைக்கு கீழே மேலாடை
வளை தொலைத்து மூளியாய் கைகள்
வெறிச்சென்ற பொட்டில்லா பாழ் நெற்றிகள்

பிடரி மயிர் சிலுப்பும் காட்டுக் குதிரைகள்
பிறன் மனை நோக்கும் சிவந்த சேல் விழிகள்
கடிவாளம் போட்டிட வேண்டாமிவர்க்கு
கட்டுப்பாடென்பது வேம்பாய் போனதின்று

ஆணைப் போல் அவளும் இங்கே சிரைக்கிறாள்
வாகனமோட்டி சாலைகளில் விரைந்து பறக்கிறாள்
இச்சைகளின் பின் சென்றிழிந்து கொண்டிருக்கிறாள்
இலக்கணம் புதிதாய் எழுதிடத் துவங்குகிறாள்

கைப்பாவையாய் கைதியாய் இருந்தவள் கையில்
விளையாட்டுப் பொம்மையாகின்றான் ஆடவனின்று
பழி வாங்கும் படலம் துவங்கிவிட்டதோ
பாட்டன் பூட்டன் பாவம் பேரன் மேலோ

மேளதாளத்தோடு உறவுசனத்தோடு சென்று
மணமகன் பரிசம் போடுவான் விமரிசையாய்
மறுநாள் அவனை அழைத்து நீயாய் விலகிவிடு
எனக்கொரு காதலன் இருக்கின்றான் என்பாள்

அவளை நல்லவளாக்குகிறாள் இன்னொருத்தி
ஆண்பாவத்திற்கு அஞ்சாத அஞ்சன விழியாள்
மணவறை வரை அழைத்து வந்து மாலை சூடி
பள்ளியறையில் அவனுக்கு பெப்பே காட்டுகிறாள்

மாற்றானை மனதில் வரித்தவள்
விடுதலை தந்துவிடு என்கிறாள்
விலையாய் லட்சங்கள் கேட்கிறாள்
பாதகி இவளோ கொல்லிப்பாவை

அவளைப் பெற்றவளோ பெரும் பாதகி
பரப்புவாள் சேதி ஆண்மையில்லையென
சட்டமும் சுற்றமும் சாதகமாகிவிட
சதிராடும் அரக்கிகளை கண்டோமே

முட்டையிட வெறுக்கும் இக்கோழிகள்
பதறாது பகல் கொள்ளை அடிக்கையிலே
ஒன்றின் பின் போடும் முட்டைகள் ஏராளம்
மனத்துணிவில் துணி துறத்தலில் தாராளம்

இல்லத்தரசி பட்டம் வேண்டாமடா
இல்லிலிருந்து நீயே இனி நடத்தடா
புதிய வேடம் ஏற்க பொறுப்பாய் வாடா
உன் பால் மனம் எனக்கு வசதியடா

பகலில் உழைத்த களைப்பைக் களைய
இரவில் பப்பில் களித்து வருவேனடா
விசையுறும் பந்தாய் நான் ஆனேனடா
வெளியூரும் வெளிநாடும் அழைக்குதடா

விரல் நுனியில் உலகை ஆள்வேனடா
வேண்டிய சுகமெல்லாம் காண்பேனடா
என் வழி தனி வழியென உணர்வாயடா
தலையிட்டால் உன் தலை இருக்காதடா

கண்ணும் காதும் கூச வேண்டாம்
பார்த்துக் கேட்டுப் பதற வேண்டாம்
மடிந்து போகட்டும் பழைய மகிமைகள்
மரத்துப்போகட்டும் மனித உணர்வுகள்

இன்றைய உண்மை நிலவரம் இதுதானே
ஊடகங்களதை உரக்கச் சொல்கின்றனவே
விளக்கின்று கொடிய விலங்கானது
நாடும் திக்குத்தெரியாக் காடானது

மன்றத்தில் வீச மறந்த தென்றலும்
கூட்டில் கூவ மறுத்த குயிலும்
இயற்கை விதி தாண்டிய விளைவுகளே
இதனால் கதி கலங்கும் பூலோகமே

Sunday, November 14, 2010

தவறன்றோ

IndiBlogger - The Indian Blogger Community
தவறன்றோ மேற்கில் சூரிய உதயம் தேடல்
கருத்த பாறாங்கல்லில் நார் உரிக்க எண்ணுதல்
வஞ்சகர் நெஞ்சில் ஈரம் சுரக்கக் காத்திருத்தல்
தீர்வுகள் காலத்தே வருமென நம்பாதிருத்தல்

Friday, November 12, 2010

பெண்

IndiBlogger - The Indian Blogger Community
பயனில்லா ஓட்டம்
பொருளில்லா ஆட்டம்
இங்கிருந்து அங்கே
அங்கிருந்து இங்கே
மாற்றி மாற்றி உதைக்க
மைதானம் முழுக்க ஓடி
களைக்கும் பந்தல்ல பெண்
பந்தயத்தில் வெல்லவோர்
பகடைக்காயுமல்ல அவள்
வாசலில் கிடக்குமோர்
மிதியடியுமல்ல அவள்
தன்னைத் தேய்த்து மணக்கும்
சந்தனந்தான் ஆனாலும்
தன்னை எரித்து ஒளியாகும்
மெழுகுவத்தியேயானாலும்
தகதக்கும் தங்கத் தகமை
தன்னிகரில்லாத தாய்மை
கொண்டவளை குலவிளக்கை
கொண்டாடுவாயா பந்தாடுவாயா
கொக்கரிக்கும் மூட ஆணினமே

Monday, November 8, 2010

கோகுலம்

IndiBlogger - The Indian Blogger Community
எங்குண்டு நல்ல குதூகலம்
கண்ணனின் கோகுலம் எது
களியாட்டங்களின் களம்
குழந்தைகள் வாழுமிடமது

Sunday, November 7, 2010

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
தெரியுமோ சொர்க்கம் லேசாய்
தூறல் தொடர்ந்து கேட்கையில்
இதமான இனிய நினைவுகளில்
சுகமாய் போர்த்திய போர்வைக்குள்

Wednesday, November 3, 2010

காண்பீர்

IndiBlogger - The Indian Blogger Community
காண்பீர் தெளிவாய்
உமது முகத்தை
உலகக் கண்ணாடியில்
உணர்வீர் உண்மையை

காண்பீர்

IndiBlogger - The Indian Blogger Community
காண்பீர் தெளிவாய்
உமது முகத்தை
உலகக் கண்ணாடியில்
உணர்வீர் உண்மையை

Tuesday, November 2, 2010

அன்னையரே

IndiBlogger - The Indian Blogger Community
படைப்பீர் அறுசுவை உணவு
பலகார வகைகள் ஒரு நூறு
பரிமாறும் பாங்கும் ஓர் அழகு
பாலகரை வளர்க்கும் அன்னையரே
பாசமெனும் நெய் விட்ட விளக்காய்
பரிமளிக்கச் செய்தீரே உயிரையூட்டி
பரவசமாய் பல்சுவை கதை சொல்லி
பகலவனாய் பலவானாய் திருமகவை
பிரகாசிக்க வைக்கும் வித்தகரே
பல கோடி தீபங்களாய் ஒளிருங்கள்

Monday, November 1, 2010

சுகமே

IndiBlogger - The Indian Blogger Community
தொலைகின்றன அலுப்பும் அசதியும்
பின்னணி இசையாய் சாரல் கேட்க
மெல்ல உறக்கம் இமைகளை அழுத்த
கண்விழிக்கும் காலை மெத்த சுகமே

Sunday, October 31, 2010

இரையாகும்

IndiBlogger - The Indian Blogger Community
இரையாகும் துளி சத்தமும் துண்டு காட்சியும்
ஐம்புலன் வழி செல்லும் அத்தனையும் மேலும்
கூரான இளம் மூளைத்திறனும் கற்பனாசக்தியும்
விழுங்கும் நம் சிறு மழலை செல்வங்களுக்கே

முதுமரங்கள்

IndiBlogger - The Indian Blogger Community
தள்ளிவைப்பர் தள்ளாத வயதை
தவிர்க்க முடிந்த தயங்கங்களை
தொடர்ந்து இளமை காக்குமிவர்கள்
துளிர்களுடனிசையும் முதுமரங்கள்

Saturday, October 30, 2010

கனி

IndiBlogger - The Indian Blogger Community
பெறுவாய் பேறுகளென்று
பிறக்கும் போது சொன்னது
பொன்னான தேவதை ஒன்று
பின்னால் தொடரும் நிழலாய்
பொறுமையாய் அதை கவனி
பெருமையே பறிக்கும் கனி

Friday, October 29, 2010

நாளைக்கு

IndiBlogger - The Indian Blogger Community
மனது குதிக்கிறது குரங்காய்
குதூகலிக்கிறது குழந்தையாய்
குழந்தைகளுடன் கும்மாளந்தான்
காவேரிக்கரையில் இயற்கை மடியில்
களிக்கும் திட்டமிருக்கு நாளைக்கு

மாயமிது

IndiBlogger - The Indian Blogger Community
குடுக்கணும் வாங்கிய கடனை வட்டியோடு
வானம் நினைத்தது மிக்க கரிசனத்தோடு
நீண்டன நீர்க்கோடுகள் வெள்ளிச் சரம் சரமாய்
நெளியாத நேர்கோடுகள் அத்தனையும் அம்பாய்
நளினமான வயலின் இசையாய் வருட சாரலாய்
நந்தியின் கை மத்தளமாய் சண்டமாருதமாய்
மண்ணும் குளிருது மனமும் சிலிர்க்குது
மறுபடியும் மறுபடியும் நிகழும் மாயமிது

Thursday, October 28, 2010

வளர்ப்போம்

IndiBlogger - The Indian Blogger Community
பண்புகளாம் நறுமணங்களாம்
பரிமாணங்களாம் வண்ணங்களாம்
பூவனங்களாம் உள்ளங்களாம்
பார்த்து பார்த்து வளர்ப்போம்

பாசாங்கு

IndiBlogger - The Indian Blogger Community
பசித்திருக்கிறான் கனவுகளுடன்
ரசித்திருக்கிறான் கண்களிரண்டால்
காத்திருக்கிறான் கனி பழுப்பதற்கு
பாத்திருக்கிறான் பொல்லாத பாசாங்கு

Tuesday, October 26, 2010

இணைய தளம்

IndiBlogger - The Indian Blogger Community
நானே இதை நம்பவில்லை
நினைத்தே பார்த்ததில்லை
நிகரில்லா இணைய தளம்
நித்தம் எனை ஈர்க்குமென்று
நீண்டு விரிந்ததிந்த வலை
நீர் நிலம் தாண்டிய நட்பலை
நன்மை தீமையின் கலவை
நல்லதை அறிவது கலை

Monday, October 25, 2010

கருத்தே

IndiBlogger - The Indian Blogger Community
கருத்தே ஏன் மறைந்தாய்
கண்ணாமூச்சி ஆடுகிறாய்
கவிதையை மறந்தாய்
கதையை துறந்தாய்
காட்டுக்குள் போனாயோ
கருமேகம் புகுந்தாயோ
கருவாய் வளர்வாயே
காத்திருப்பேன் நான்

அந்தாதி

IndiBlogger - The Indian Blogger Community
அந்தாதி பாடிக் களிப்பது
அந்தி மாலை பொழுதுக்கு
அத்தனை உவப்பானது
அவ்வப்போது நாங்கள் கூடி
அற்புதமான பாட்டுக்களை
அள்ளி விடுவது குதூகலம்
அங்கே வயது வரம்பின்றி
அழகிய நிலவொளி நிரம்ப
அரங்கேறும் கொண்டாட்டம்
அன்பான குடியிருப்பிலுண்டு

Thursday, October 14, 2010

சந்தேகம்

IndiBlogger - The Indian Blogger Community
சிதறாட்டம் பெண்ணின் சிந்தனையில்
சிரித்தால் ஏன் சிரித்தாய் என்கிறாள்
சினந்தால் முகம் கருத்து வாடுகிறாள்
சந்தேகம் பேயாய் அவளை ஆட்டிட
மனக்குரங்கு கிளைக்குக் கிளை தாவ
மணவாளன் பாடுதான் திண்டாட்டம்

Tuesday, October 12, 2010

பச்சை முகங்களிலே

IndiBlogger - The Indian Blogger Community
வாழ்கிறாயா நலமாய்
தண்ணீர் போதுமா
வெளிச்சமும் நிழலும்
சரியாய் கிடைக்கிறதா
காலையில் விழித்ததும்
பாசமாய் கேட்கிறேன்
வாசலில் வளர்க்கும்
அத்தனை செடியிடமும்
பச்சை முகங்களிலே
எத்தனை பரவசம்

Saturday, October 9, 2010

அபூர்வம்

IndiBlogger - The Indian Blogger Community
நல்லோரால் நாடும் வீடும் சிறக்கும்
எல்லா கிழமையும் பண்டிகை ஆகும்
அவரோ மிக அரிதாகவே அவதரிப்பர்
அதிசய நிகழ்வாக அவர் தோன்றுவர்
நாள் மாதம் வருடம் மூன்று எண்ணும்
பத்தென அழகாய் அரிதாய் நாட்காட்டியில்
நாளை நாம் காணும் அபூர்வம் போலவே

Wednesday, October 6, 2010

நல்ல இனம்

IndiBlogger - The Indian Blogger Community
நல-விரும்பியோரையே முதலில் பார்க்கலாம்
விபத்து இயற்கை சீற்ற அழிவு கொடிய இழப்பு
ஏற்பட்ட அடுத்த கண்மே சடுதியில் களமிறங்கி
களைப்பின்றி உழைக்கும் அந்த நல்ல இனம் வாழ்க

Monday, October 4, 2010

உண்மையிது

IndiBlogger - The Indian Blogger Community
தகுமோ என்று யோசிக்கவில்லை
தைரியமாய் இரு முதிய தோழிகள்
அங்காடித் தெருவில் அலைந்து
அதையும் இதையும் வாங்கி
மனம் போல் உல்லாசமாகவே
பொழுதையும் காசையும் கரைத்து
பை நிறைய பொருள் சுமந்து
வீடு திரும்புகையில் களைப்பில்லை
ஆண்களோடு செல்வது தொல்லை
அனுபவம் இனிதாய் இருப்பதில்லை
புரியாத உண்மையிது அனைத்து
பெண்களும் ஒருமனதாய் சொல்வது

Sunday, October 3, 2010

செல்லங்கள்

IndiBlogger - The Indian Blogger Community
இன்பமே என் வீட்டில்
காதல்பறவைகள் காட்சி
வித வித வண்ணங்கள்
சளசள பேச்சுக்கள்
துருதுரு பார்வைகள்
அழகான கொஞ்சல்கள்
ஊஞ்சல் ஆட்டங்கள்
பல வித சப்தங்கள்
சின்னஞ்சிறு கிளிகள்
கூண்டுச் செல்லங்கள்

Saturday, October 2, 2010

உவமை மயக்கம்

IndiBlogger - The Indian Blogger Community
நட்சத்திரம் என்றால் வைரம்
குழந்தை பாடும் பாட்டிலே
பாரதிக்கோ வெறும் வைரமல்ல
கருநீலப் பட்டுப் புடவையில்
பதித்த நல் வைரமாம் அது
கண்ணம்மாவின் கரிய விழி
அதன் சுடர்தான் சூரியசந்திரர்
என்னே மயக்கமது மயக்குது
கவியின் உவமை மயக்கம்
தருதே தனிக் கிறக்கம்

வியப்பின் விளிம்பில்

IndiBlogger - The Indian Blogger Community
ஏது பண்டிகை என்று
என்னுள்ளே குழப்பம்
வழியெங்கும் வாழைமரம்
வீதியெல்லாம் குதூகலம்
அதற்குள் சித்திரையா
திருவிழா வந்துவிட்டதா
மெல்ல உறைத்தது அது
எந்திரன் வெளியிட்ட நாள்
ரசிகர்கள் கொண்டாட்டம்
வியப்பின் விளிம்பில் நான்

வரமா

IndiBlogger - The Indian Blogger Community
சாபமோ வரமோ
நீண்டுவிட்ட ஆயுள்
நரைத்த முடியும்
உதிர்ந்த பல்லும்
உளறும் சொல்லும்
சுருங்கிய தோலும்
வற்றிய முகமும்
அழகின் அழிவே
அதைவிட பெரிதே
நோயும் வலியும்
தேய்ந்த எலும்பில்
குறுகிவிட்ட குடலில்
மங்கிய பார்வையில்
மந்தமான செவியில்
முடங்கிய நிலையில்
வெறித்த அமைதியில்
ஒருவித வெறுமையில்
உள்மன தனிமையில்
வைத்திய செலவில்
வேற்றிட நிழலில்
விளங்காத கலக்கத்தில்
வரமா ஆயுள் நீழ்வது

Friday, October 1, 2010

அன்பு

IndiBlogger - The Indian Blogger Community
அன்பு என்ன மனதில் ஊற்றோ
இறைக்க இறைக்க ஊறுமோ
குறையாது தினம் வளருமோ
வருந்தாது பாரம் தாங்குமோ
உறங்காது இமைக்குள் காக்குமோ
தேடாது தானாய் வந்த வரமோ

Thursday, September 30, 2010

நிலவோடு

IndiBlogger - The Indian Blogger Community
அமெரிக்காவால் நிலாவுக்கு ஆளை அனுப்ப முடிந்ததிப்போ
ஆனா எங்க ஊரு பாட்டி அங்கே எப்பவோ குடியேறியாச்சே
வெள்ளிக்கிண்ணத்தில் பாலன்னம் உண்ணும் பாலகர் பார்த்திட
கண்ணுறங்கும் முன் கேட்டு கிறங்கிட நாம் சொல்லும் கதை
அன்று வந்த அதே நிலவு இன்று காணும் காட்சி வேறென
கவிதை வரிகள் படைக்கும் பழைய உறவு நமக்கு நிலவோடு

Friday, September 24, 2010

மாதரே

IndiBlogger - The Indian Blogger Community
மாதரே ஆதாரம் என்றும்
மரத்தின் ஆணிவேராவார்
சகடம் சுழல அச்சாணியே
மக்களைப் பெறுவதாலும்
வணிகம் வளரச் செய்வதாலும்
சேலை நகை முகப்பூச்சு
கடைச் சரக்கு அத்தனையும்
விற்றுப் போவது அவராலே

Saturday, September 18, 2010

மீனாச்சிக்காக

IndiBlogger - The Indian Blogger Community
மீனாச்சிக்காக ஊரெங்கும் திருவிழா
மல்லியப்பூ மணக்கும் சித்திரையிலே
மாசி வீதியிலே தினமும் ஊர்கோலம்
மனசெல்லாம் நிறைஞ்சிருக்கும் காலம்
அன்புத் தங்கச்சிக்கு சீரோடு வர்ராரு
அண்ணன் அழகரு வைகை ஆத்தோட
கொட்டிக் கிடக்கு பவுர்ணமி நிலா
கூடிக் கிடக்கு பல ஊரு சனம்
பந்தல் போட்டு அன்னமும் பானமும்
பரிமாறும் பஞ்சமில்லா பக்தியிருக்கு
வெள்ளந்தியா திரியுது கூட்டமிங்கு
வெல்லமா இனிக்குது ஆத்தா ஆட்சி

மீண்டும்

IndiBlogger - The Indian Blogger Community

சின்னக்குழந்தையின் சிமிழ் வாய் சிரிப்பில்
சிக்கனமில்லை பாகுபடுத்தும் பாவமில்லை
கொஞ்சும் மொழியில் கெஞ்சும் விழியில்
கொஞ்சம் கூட வஞ்சமில்லை நஞ்சுமில்லை
சின்னத்தலையில் தீய சிந்தனையில்லை
சீண்டிப்பார்க்கும் சின்னத்தனமில்லை

சூதுவாது தெரியாத பருவம்
கள்ளம் கபடு அறியாத உள்ளம்
எவரையும் எதையும் நம்பும் எளிமை
அழகான அமுதான அஞ்ஞானம்
ஆவலை மறைக்கத் தேவையில்லை
அன்பை மறுக்கத் தோன்றுவதில்லை

எழுதாத வெள்ளைக் காகிதம்
பிசையக் காத்திருக்கும் களிமண்
உளியால் செதுக்கிடவோர் சிற்பம்
இறைவன் எழுதிய அற்புத நவீனம்
விதியின் மதியின் கையிலோர் விடுகதை
வினையும் விபரமும் கலக்கும் தொடர்கதை

வளர வளரத் தேயும் அதிசய நிலவு
பழகப் பழக மாசுறும் அனுபவ உலகு
சறுக்கல்கள் சமரசங்கள் பல கண்டு
சர்க்கரையோ உப்போவென மயக்கம் கொண்டு
கருப்போ வெள்ளையோ எதுவென கலங்கி
சம்மதமில்லாப் பல கரைகளில் தங்கி

ஏன் வளர்ந்தோம்? எப்படி திரிந்த பாலானோம்?
இழந்த பரிசுத்தம் நிரந்தரமானதோர் இழப்போ?
இறைவன் கருணைக்கு எல்லையில்லை
இயற்கையில் எதுவும் இறப்பதில்லை
துவக்கத்தைத் தொட்டு முடியும் வட்டம்
மீண்டும் குழந்தையாகும் முதிய கட்டம்

பொக்கை வாயிலே வெள்ளை சிரிப்பு
பிரம்மானந்தத்தின் வழி வந்த களிப்பு
நினைவில் எதுவும் நிற்பதில்லை
நிலையாய் எதிலும் நாட்டமில்லை
நேற்றும் நாளையும் பொருட்டில்லை
நின்று போயிருக்கும் காலக்கடிகாரம்

Thursday, September 2, 2010

தேன்

IndiBlogger - The Indian Blogger Community
திண்ணம் மனதின் குணம்
எண்ணம் கவரும் மணம்
வண்ணம் பலவும் கூடும்
கிண்ணம் வழியும் தேன்

Saturday, August 28, 2010

பொய்யுலகின் பொழுதுபோக்குகள்

IndiBlogger - The Indian Blogger Community
ஏழ்மையறியா இந்திரலோகம் படைத்தேன்
தங்கக்காசு அங்கே கொட்டுது மழையாய்
மாடி வீடுகள் கேளிக்கைகள் பூங்காக்கள்
காய்த்துத் தொங்கும் கனிமரங்கள் காணீர்
எத்தனை பூக்கள் தாவரங்கள் குளிர்ச்சியாய்
வழுக்கும் தார் சாலைகள் மாநகரந்தன்னிலே
எந்நேரமும் மக்கள் கூட்டமாய் நடமாட
அவர்களையெல்லாம் அன்பாய் நான் வரவேற்க
உற்சாகம் பெருக மேலும் மேலும் வளர்கிறது
கற்பனை கலந்து உருவாகும் அழகோவியமாய்
காலம் போவது தெரியாமல் மூழ்கினேன்
பொய்யுலகின் பொழுதுபோக்குகள் அற்புதம்
இணையத்தில் விளையாடும் சிறுமியானேன்

சொர்க்கம்

IndiBlogger - The Indian Blogger Community
சுகமே தனிமை
கையில் புதினம்
கொறிக்க பக்கோடா
குடிக்கத் தேனீர்
பின்னணியில் இசை
பதமான வானிலை
பதறாத சூழ்நிலை
ஓய்வும் சொர்க்கம்

Friday, August 27, 2010

மீண்டுமொரு வசந்தம்

IndiBlogger - The Indian Blogger Community
முன்னம் பார்த்த முகங்களா இவை
முதிர்ச்சியின் அடையாளம் எத்தனை
மூப்பின் தப்பாத பல அறிகுறிகள்
மூக்குக்கண்ணாடி நரைத்த தலை
மறைந்துவிட்டனவே கொடியிடைகள்
மறக்கவில்லை நளின நடை உடை
மனம் திறந்த கள்ளமில்லா கதைகள்
மடைதிறந்த வெள்ளமாய் வார்த்தைகள்
மலரும் நினைவுகளில் அருவிக்குளியல்
மாதங்கள் போலாயின வருடங்கள்
மாயையாய் திரும்பிய பள்ளிநாட்கள்
மணந்தது நாற்பத்தியெட்டாண்டாகியும்
மறுபடியும் தோழியர் சந்தித்தபோது
மீண்டுமொரு வசந்தம் அன்று பூத்தது

Thursday, August 26, 2010

தாயே

IndiBlogger - The Indian Blogger Community
தாயே உன் தலையில் அணிய தொப்பிகள் எத்தனை
தாரமானாய் கணவனானான் உன் முதல் குழந்தை
பதவி உயர்வுகள் பல பெற்றபின்னும் வளர்கிறாய்
தோழியாய் தாதியாய் ஆசானாய் ஆலோசகனாய்
ஆலமரமாய் நீ குடை விரிக்கிறாய் அந்நிழலிலே
சுற்றம் மொத்தமும் அங்கே சுகமாய் சுவாசிக்குதே

காகிதக்குப்பைகள்

IndiBlogger - The Indian Blogger Community
கருத்தே இல்லாத கதைகள்
கற்பனை வற்றிய புனைவுகள்
குணம்கெட்ட பல போக்குகள்
காண்பீர் காகிதக்குப்பைகள்

நல்ல கருவி

IndiBlogger - The Indian Blogger Community
கோலே ஆட்டுவிக்குது குரங்கை
வீட்டுப்பாடம் எழுதும் குழந்தையை
இசைக்கின்ற ஒரு வாத்திய குழுவை
இடையர் மேய்க்கும் கால்நடையை
காவலரிடம் மாட்டிய கயவாளியை
கோலே வழி நடத்துது குருடரை
கூடிப் பாடி மகிழும் குமரியரை
உண்டோ அது போல் நல்ல கருவி
IndiBlogger - The Indian Blogger Community